search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil manila congress"

    • பொதுமக்களிடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி கையெழுத்து வாங்கினர்.
    • மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் செவல் முத்துராஜ், துரை, அனந்தராமன், சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வந்து மதுவிலக்கை அமல்படுத்த கோரி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைவர் அழகிரி படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்பு த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக த.மா.கா.வினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் த.மா.கா.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அப்போது திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GKVasan #AyushmanBharat
    சென்னை :

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பொது சுகாதாரத்துறையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கவேண்டும். மேலும் இந்த திட்டமானது பன்னாட்டு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் லாபத்தை நோக்கமாக கொண்டதாக இருக்கக்கூடாது.

    இந்த திட்டமானது அனைத்து தரப்பு மக்களின் மருத்துவ செலவுக்கு பேருதவியாக இருக்குமா என்ற சந்தேகத்திற்கு இடமே அளிக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் வரும் சிகிச்சை முறைகளை தனியார் நிறுவனங்கள் முழுமையாக, சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பொது சுகாதாரத்துறைக்கு பாதிப்பு இருக்கக்கூடாது.

    மத்திய அரசு, அரசு மருத்துவமனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத சிகிச்சைகளுக்கு காப்பீட்டை வழங்க வேண்டும், மத்திய அரசே நிதியுதவி செய்ய வேண்டும். மாநில உரிமைகள், பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் போன்ற அனைத்திலும் அதிக அக்கறை கொண்ட நோக்கத்தோடு பிரதமரின் மருத்துவ காப்பீடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #GKVasan #AyushmanBharat 
    வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதுமான மழை பெய்தும் கடும் வறட்சி நிலவுகிறது. அரசின் நீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

    தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் செய்ய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும். குட்கா விவகாரத்தில் உண்மை நிலையை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.

    இவ்வாறு ஜி,கே. வாசன் கூறினார். #gkvasan

    ராசிபுரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராசிபுரம்:

    பாலியல் அத்துமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு சட்டம் இயற்றப்பட வேண்டும், ராசிபுரம் நகரத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும், ராசிபுரத்தில் உள்ள அரசு மதுபான கடைகளின் பார்களில் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராசிபுரத்தில் இயக்கப்படும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படாமலும், ஏர் ஹாரன் அடிக்கப்படாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், தேர்தல் முறையீட்டுக்குழு உறுப்பினர் வக்கீல் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வக்கீல் ஆர்.டி.இளங்கோ தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் செங்காட்டு கணேசன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அருள், மாவட்ட பொதுச் செயலாளர் பழனிசாமி, நாமகிரிபேட்டை வட்டார தலைவர் பெரியசாமி, நாமகிரிபேட்டை துணை தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.
    சென்னை :

    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. மகளிரணி தலைவர் ராணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பானு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாறவேண்டும் என்றால் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடும் தண்டனை விதிக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து, பெண்கள் நிம்மதியாக நடமாடுவார்கள். பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் ஆலோசனை மையத்தை அணுகி, தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தால் உரிய தீர்வை எங்கள் நிர்வாகிகள் ஏற்படுத்தி தருவார்கள்” என்றார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த துணைத்தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகளுடன், ஜி.கே.வாசன் கலந்துரையாடினார். இதில் அரசியல், போராட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார். இறுதியில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. 
    ×