search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Labour"

    • சின்னகடை வீதி மற்றும்‌ சுற்று வட்டார பகுதிகளில்‌ உள்ள இனிப்பு தயாரிக்கும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விற்பனை செய்யும்‌ கடைகளில்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர்‌ மற்றும்‌ வளரிளம்‌ பருவத்தினர்‌ எவரும்‌ பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சென்னை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுரைக்கிணங்க, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் தமிழரசி மற்றும் சேலம் தொழிலாளர் இணை கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் உத்தரவின்பேரில் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்)

    கிருஷ்ணவேணி தலைமையில் காவல் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர், மேட்டூர் மற்றும் ஆத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    இதில் கந்தம்பட்டி பைபாஸ், அடிவாரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, சின்னகடை வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    எச்சரிக்கை

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த தகவலை சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
    • அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

    ஈரோடு:

    குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனாரா? என்பது குறித்து மாவட்ட தடுப்பு படையினர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து மொத்தம் 175 நிறுவன ங்களில் கூட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதேப்போல் கொத்தடிமை தொழிலாளர் ஒழித்தல் சட்டத்தின் கீழ் கால்நடை மேய்க்கும் பணிகளில் கொத்த டிமைகள் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் கண்டறியப் படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் கூறியதாவது:

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

    அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20 ஆயிதம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்ட னையாக விதிக்கப்படும்.

    மேலும் குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்
    • 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

     திருப்பூர் : 

    தொழிலாளர் ஆணையர்(சென்னை) அதுல்ஆனந்த் அறிவுரைப்படி, மாவட்ட ெதாழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட தடுப்பு படையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றும் நோக்கில் மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒரு கடையில் ஒரு குழந்தை தொழிலாளியும், இறைச்சி மற்றும் மருந்து கடைகளில் தலா ஒரு வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமா்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.

    • விழிப்புணர்வு பேரணியானது சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கியது.
    • மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    சுரண்டை:

    சுரண்டையில் மனித உரிமை களம் மற்றும் காப்புக்களம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். காப்புக்களம் இயக்குனர் பரதன் முன்னிலை வகித்தார்.

    வளமான எதிர்காலம்

    இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகள் கையில் தான் இந்தியாவில் வளமான எதிர்காலம் உள்ளது.

    அவர்களின் கல்விக்காகவே மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், சாந்தி தேவேந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, கந்தையா, ராஜன், பிரபாகர், காப்புக்களம் நிர்வாகிகள் சந்திரா பரமேஸ்வரி, வர்க்கீஸ் ராணி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேர்ல்டு விஷன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வக்கீல்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    • வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.

    இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-

    லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
    • கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தடுப்பு படையினர், போலீசார், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் மற்றும் சைல்டு லைன் ஆகிய குழுவினர் நேற்று சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது,' குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலமாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்' என்றார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினர்களுக்கான காலாண்டுக் கூட்டம் நடந்தது.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு விவரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்/தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    தொழிலாளர் துறையால் 1.10.2021 முதல் 31.10.2022 வரை கடைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 5 கடைகள் நிறுவனங்கள் மீது ரூ.85 ஆயிரம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

    18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 32 நிறுவனங்கள் மீது ரூ.2 லட்சத்து60 ஆயிரம் விருதுநகர் மாவட்ட கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையால் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 8 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீதும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

    சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கிராஜா மற்றும் தொழிலாளர் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    அவிநாசி

    சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,), திருப்பூர் சைல்டுலைன் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் அவிநாசியில் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பழங்கரை, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் சேவூர், கருவலூர், தெக்கலூர், பகுதிகளில் பிரசார பயணம் நடைபெறுகிறது.இதில் சி.எஸ்.இ.டி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கருணாம்பிகை, நயினான், சின்னச்சாமி, சி.எஸ்.இ.டி., சைல்டுலைன் அமைப்பின் வைஷ்ணவி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம், நெல்லை கோர்ட்டு வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தில் சென்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் குறித்த கையேடுகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். நீதிபதிகள் அருள் முருகன், ஜெயராஜ், சந்திரா, ஹேமானந்த குமார், கங்கராஜன், தனஞ்செயன், வக்கீல்கள் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×