search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "McDonald’s"

    • லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    • வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.

    இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-

    லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
    • ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.

    ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி, தற்போது அதன் பயனர்களுக்கு அசத்தல் ஆஃபர் ஒன்றையும் வழங்கி உள்ளது. அதன்படி சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த அசத்தல் ஆஃபரை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.

    அதன்படி ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மெக் டொனால்ட்ஸின் கூப்பன் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை வைத்து மெக் டொனால்ட்ஸின் 2 சிக்கன் பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ள முடியுமாம். இந்த ஆஃபர் தற்போது டர்க்கி நாட்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


    விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த ஆஃபர் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும். அந்த போனின் விற்பனையை அதிகரிக்கவே இத்தகைய சலுகையை சியோமி நிறுவனம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ×