என் மலர்
நீங்கள் தேடியது "Awareness rally"
- அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
- பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு உறுதிமொழிநிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது;
தமிழகத்தில் கொரோனா வந்தது. அதனை முறியடித்தோம் தற்போது குரங்கு அம்மை வருகிறது என்கிறார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை. ஆனால் தற்போது ஒரு புது வியாதி பரவி வருகிறது.
பள்ளி கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகிறது.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளம் தளிர்களை கருகச் செய்கிறது.
போதை மிட்டாய்
மிட்டாய் மாதிரி இருக்கும் போதை பொருளை முதல் நாள் சாப்பிட்டால் போதை வரும். 2-வது நாள் பயன்படுத்த தேடும்.
3-வது நாள் அதற்கு அடிமை ஆக்கிவிடும். பக்கத்தில் இருந்தவன் சாப்பிட்டால் அவனும் போதைக்கு அடிமையாகி விடுவான்.
போதைக்கு அடிமையானால் சுயநினைவை விளக்க நேரிடும்.
போதைப் பொருட்களை எதிர்ப்பவர்களை கொல்லக் கூடிய வைராக்கியத்தை கூட அது தரும்.
ஆந்திராவில் இருந்து கடத்தி ஒரு காலத்தில் மூலை முடுக்குகளில் விற்பனை செய்யப்பட்ட போதை பொருள் தற்போது பள்ளி கல்லூரிகள் மாணவ மாணவிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது இதனை தடுத்தாக வேண்டும்.
வளர வேண்டியவர்கள் அரும்பாக இருக்கும் போதே கருகி விடும். சமுதாயம் கெட்டு போய் விடும். ஒவ்வொருவரும் நான் போதைபழக்கத்துக்கு எதிரானவன் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். போதையை ஒழிக்க சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் பூங்கொடி, டி ஐ ஜி ஆனி விஜயா போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி யை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
- போதை பழக்கத்தை ஒழிக்க வலியுறுத்தி நடத்தினர்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு பகுதியில் அமைந்துள்ள அரவிந்தர் வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் சமூகத்தை சீரழிக்கும் வகையில் இருக்கக்கூடிய மதுப்பழக்கம், கஞ்சா, புகையிலை, பான்மசாலா மற்றும் போதை ஊசி போன்றவற்றால் குடும்பத்திற்கும் மற்றும் மாணவ சமுதாயத்திற்கும் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்று கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியை போளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணவேணி மற்றும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது
- தவ்ஹீத்ஜமாத் சார்பில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரதட்ச ணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் வடபுறத்தி ல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முஹம்மது பாரூக். மாவட்ட மருத்துவரணி முஹம்மது அலி தலைமை வகித்தனர். கிளை நிர்வாகிகள் முஹமது இஸ்மாயில், முஹமது ஆரிஃப், முஹமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ேபரணியில் ஏராளமான மாணவர்கள், ெபண்கள் கலந்து கொண்டு, வரதட்சனைக் கொடுமைக்கு எதிராக முழுக்கமிட்டர். மேலும் கைகளில் பாதகைகள் ஏந்தி பேரணியில் சென்றனர். பேரணிக்கு முன் அனுமதி பெறவில்லை என்று கூறி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை, பேரணியை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரதம் பரபரப்பு காணப்பட்டது.
- ஊர்வலத்திற்கு நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார்.
- வருகிற 13,14,15-ந் தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.
நெல்லை:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.
இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தி யுள்ளது.
இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல் துறை சார்பில் பாளையில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப் பாளர் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். ஊர்வலமானது பாளை தலைமை தபால் நிலைய த்தில் தொடங்கி பெருமாள் கீழரதவீதி தெற்கு பஜார் வழியாக தபால் நிலையத்தை அடைந்தது. அப்போது முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜி கணேசன் கூறியதாவது:-
சுதந்திர தின அமுதம் பெருவிழாவை முன்னிட்டு வருகிற 13,14,15-ந் தேதிகளில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.
அதன்படி அனைவரும் வீடுகளில் தேசியகொடி ஏற்றி தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தபால் நிலையத்திலும் 30 இன்ச் நீளமும், 20 இன்ச் உயரமும் கொண்ட துணியால் செய்யப்பட்ட தேசிய கொடி ரூ.25க்கு விற்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வாங்கி பயன்பெறலாம்.
நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் தீர்த்தாரப்பன், ஹேமாவதி, பாளை அஞ்சல்அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் கனகசபாபதி, அண்ணா மலை மற்றும் திரளான அஞ்சல்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
- மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி:
உலக தாய்ப்பால் வாரத்தயொட்டி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ஸ் மருத்துவ கல்லூரி செவிலியர் மற்றும் மருத்துவ மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.கார்கில் நினைவிடத்தில் இருந்து தலைமை செயலகம் வழியாக காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி துணை முதல்வர் ஸ்டாலின் சமுதாய மருத்துவர் வேலவன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் பீட்டர் பிரஷாந்த் நன்றி கூறினார். 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
- அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக வந்தனர்.
கல்லிடை:
உலக புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
அம்பை வனச்சரக அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக பூக்கடை பஜாரில் திரும்பி தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, வழியாக சென்று வனத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அடைந்தது, பேரணியில் வனத்துறையினர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி தொடர் ஓட்டமாக கொண்டு வந்து ஏற்றினர்.
இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, மெரிட் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, கேம்ப்ரிட்ஜ் பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டு புலிகளின் முக்கியத்துவம், வனப் பாதுகாப்பின் அவசியம், மரம் நடுதலின் அவசியம் பற்றிய பதாகைகள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்தனர். மேலும் புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் வன உயிரினக்காப்பாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பயிற்சி வனச்சரகர் கிருத்திகா புலிகளின் எண்ணிக்கை அதன் குணாதியங்கள், வனப் பாதுகாப்பு விபரங்களை தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
- இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம்:
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புலிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் புலி மாஸ்க் அணிந்தும் பேரணியாக சென்றனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வடக்குப்பேட்டை, ஆற்றுப்பாலம், பஸ்நிலையம் வாய்க்கால் மேடு வழியாக மாவட்ட வன அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் சத்தியமங்கலம் வன அலுவலர் தீபக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .
- சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பேரணி ,விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சைக்கிள் பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பரமசிவம்பாளையம் வரை சென்று பின்னர் மீண்டும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த சைக்கிள் பேரணிக்கு சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து "என் குப்பை எனது பொறுப்பு " என்ற தலைப்பில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது . இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ,மாணவிகள் "நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம்" என்ற வாசகத்தை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பள்ளபாளையம் குளம் அருகே நிறைவடைந்தது.
பின்னர் பள்ளபாளையம் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .இந்த சைக்கிள் பேரணி,விழிப்புணர்வு ஊர்வலத்தில் சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள்,சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான வேலுச்சாமி, தயாளன் வினோஜ்குமார், பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, பிரியா, பெரியசாமி, துளசிமணி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பாளை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் பாளை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று போட்டிகள் நடைபெற்றது.
அதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செஸ் போர்டு வடிவிலான பிரம் மாண்டமான கேக்கினை வெட்டி பொதுமக்களுக்கு சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மது பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.
வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி அரசு அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, மாவட்ட சதுரங்க சங்கத்தை சேர்ந்த பால் குமார், செல்வ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
- நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை:
போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாளை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் தேவா தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
- தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரத்தை பிளாஸ்டிக் இல்லாத தூய்மை நகராக மாற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கொடியரசு பேரணியை துவக்கி வைத்தார் .இதில் தாராபுரம் தேன்மலர் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியானது தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக பூக்கடை கார்னர் சர்ச் வீதி ,தாலுகா அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
- மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
- உலக மக்கள்தொகை தின பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, மதனத்தூர் ரோடு மற்றும் ஒத்த தெரு வழியாக பேருந்து நிலையத்தில் முடிவுற்றது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி சமுதாய சுகாதார மையத்தின் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு துணை வட்டார வளர்ச்சிஅலுவலர் முருகானந்தம், லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், சி.பி.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் வினோத்குமார்ஜெயின், செயலர் வெங்கன்னபாபு, பொருளாளர் உதயகுமார், வினய் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜ்குமார், பிரவீன்காந்தி, கிராம செவிலியர்கள்,