search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clean India"

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன்' விருது என்று பெயர். இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்தியா முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சூரத் 2-வது இடத்தில் உள்ளது. நவி மும்பை 3-வது இடத்திலும், புதுடெல்லி 7-வது இடத்திலும், ஐதராபாத் 9-வது இடத்திலும், அகமதாபாத் 15-வது இடத்திலும், லக்னோ 44-வது இடத்திலும், பெங்களூர் 125-வது இடத்திலும், மும்பை 189-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 438-வது இடத்தில் உள்ளது.

    அதேபோல சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மராட்டியம் முதல் இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.

    446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி 262-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி 9,500 புள்ளிகளுக்கு 5,794.9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. தூத்துக்குடி 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளன. சென்னை 5-வது இடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் 40-க்கும் மேற்பட்ட இடங்களையே பிடித்திருந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு 45-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 43-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு 44-வது இடத்திலும் சென்னை இருந்தது. தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 9,500 புள்ளிகளுக்கு 4313 புள்ளிகள் கிடைத்துள்ளது.

    தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு உள்ளிட்டவைகளை கையா ளுவதன் அடிப்படை யில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் குவிந்த குப்பைகளில் 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கை யூர் குப்பை கிடங்குகளில் 21 சதவீதம் குப்பைகள் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு நாளைக்கு 6500 டன் குப்பைகள் சேருகின்றன. பொது கழிப்பறைகளில் 77 சதவீதம் தூய்மையாக பராமரிக்கப்ப ட்டுள்ளது.

    அதே நேரத்தில் 95 சதவீதம் அளவுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள் 90 சதவீதம், குடியிருப்பு பகுதிகள் 91 சதவீதம் அளவுக்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் 85 சதவீதம் தூய்மையாக உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி உரம் தயாரிப்பதில் நீண்ட கால திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் சென்னையின் தரம் மேம்படும். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் காய்வாய் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன' என்றார்.

    • அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
    • தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடை பெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

    பைங்காநாடுஅரசுமேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோகன், முன்னாள் தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் இராசகணேசன் தொடங்கி வைத்து பேசும்போது, காந்தியடிகளின் பிறந்தநாளில் மகாத்மா காண விரும்பிய தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தாலே வாழ்வின் பயனை நாம் உணரலாம்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அடுத்தொரு பிறவி எடுத்தாவது திருக்குறளைமுழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய மகாத்மாகாந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை அனைவரும் படிக்க வேண்டும்.

    காந்திய சிந்தனை உலக உய்விற்கான வழி, அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் காந்தியின் தனிமனித வாழ்க்கையிலிருந்து நிறைய பாடங்களைக் கற்று வருகின்றன என்று கூறியதுடன்பாரதியாரின் காந்திபுகழ் வணக்க பாடல்களையும், ரகுபதி ராகவ ராஜாராம் காந்தி பஜனைப் பாடலையும் பாடினார்.

    முன்னதாக அனைவரையும் திட்ட அலுவலர் பிரான்சினா விண்ணரசி வரவேற்றார். முடிவில் உதவித்திட்ட அலுவலர் சுசீலா நன்றி கூறினார். தமிழாசிரியை இசபெல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் "தூய்மை இந்தியா இருவார விழா" என்ற பெயரில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியரிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிப்பது, சுற்றுப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வகையில், மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் புராதன சின்னங்கள் பகுதியில் பொம்மலாட்டம், மைன்ட்ஷோ, கையெழுத்து இயக்கம் வாயிலாகவும், துணிப் பைகளை இலவசமாக கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறுவன பொது மேலாளர் கோமுராஜ், உதவி மேலாளர் ராமலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதி யை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டலத்தில் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியானது சாலை தெரு, தொண்டர் நயினார் சன்னதி சாலைகளில் நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் முத்துராஜ், மனோஜ், மாரியப்பன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வடலூர் நகராட்சியில் “என்குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார்.எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.தூய்மையான இந்தியாவை உருவாக்குக்வோம், விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணி வடலூர்நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி வள்ளலார்சபை பஸ்நிறுத்தம் வரை சென்று, வடலூர் நான்கு முனைசந்திப்பு வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முழக்கங்களுடன் கையில் பதாகை ஏந்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் மேலாளர் (பொறுப்பு) முத்துராமன், துப்புரவு ஆய்வாளர் பாக்கியநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் திவ்யா, பரப்புரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.

    நெல்லை:

    நெல்லை மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று இந்திய அரசின் தூய்மை இந்தியா 2.0 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியை மாநக ராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியானது வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி பாளை பஸ் நிலையம் வழியாக தனியார் கல்லூரியில் முடிவடைந்தது. இதில் கள விளம்பர அலுவலர் ஜீனி ஜேக்கப், விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டேவிட் அப்பாதுரை, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கவுரவிக்க ப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா 2.0 குறித்த புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.மேலும் வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    • துாய்மை இந்தியா திட்ட உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
    • கரூர் ரயில்வே நிலையத்தில் ஏற்பாடு செய்தனர்

    கரூர்:

    கரூர் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜராஜன் தலைமையில், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, பயணிகளுக்கு துாய்மை திட்டம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஸ்டேஷன் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு, ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், முதன்மை சுகாதார ஆய் வாளர் சாந்தி, ரயில்வே பாதுகாப்புப் படை 

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மிகவும் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
    புதுடெல்லி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது.  4,320 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார்.

    இதில், நாட்டின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதற்கான விருதை ஜனாதிபதி வழங்கினார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக தூய்மைக்கான விருதை பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றவாது இடத்தையும் பிடித்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு விருது

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் மத்திய பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் கங்கை கரையோர நகரங்களில் தூய்மையான நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உள்ள பகுதியில் கடற்கரையை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பின்னர் புதுவை மாநிலத்தை தூய்மையாக வைப்போம் என பதாகையில் எழுதி முதல் அமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.

    பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடல் வளத்தை பேணி காப்பது நமது கடமை. நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதிகளவில் சுற்றுலா தளங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் பாராட்டியுள்ளார். #SwachhataHiSeva #CleanIndia #JaggiVasudev #TNGovt
    கோவை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அடுத்த மாதம் 2-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை ‘தூய்மையே சேவை’ என்னும் விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்து மக்களிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

    தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிகழ்ச்சி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, தமிழக உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை கலெக்டர் ஹரிஹரன், மத்திய நீர் மற்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர்அருண் பரோகா, கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், சுற்றுப்புற கிராம மக்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

    தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.


    இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ள ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  #SwachhataHiSeva #CleanIndia  #JaggiVasudev #TNGovt
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார். இதற்காக நாடு முழுவதிலும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, தூய்மையான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதே இந்த திட்டத்தின் இலக்கு என்றும், தூய்மையான இந்தியா உருவாக நாம் அனைவரும் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    ‘இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான தூதுவர்கள், இந்தியாவில் நேர்மறை மாற்றத்தின் முன்னணியில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.  4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

    மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva #CleanIndia
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் கணேஷ் வெங்கட்ராம் தூய்மை இந்தியா திட்டமான `சொச் பாரத்' மூலம் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்திருக்கிறார். #SwachhBharat #GaneshVenkatraman
    அபியும் அனுவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

    இந்த நிலையில், ஹார்பிக்கின் `சொச் பாரத்' பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக கணேஷ் வெங்கட்ராமன்  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்ஷய் குமாருடன், கணேஷ் வெங்கட்ராமன் தற்போது கைகோர்த்துள்ளார். 

    அக்ஷய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் சம்பந்தப்பட்ட விளம்பர படங்களின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம் அது பற்றி கூறும்போது, “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும், அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம். 



    தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் `ஹார்பிக்' நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும் “ என்றார். 

    தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் `மை ஸ்டோரி' படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்திலும் கணேஷ் வெங்கடராம் நடித்துள்ளார். #SwachhBharat #GaneshVenkatraman #AkshayKumar

    ×