search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swachh Bharat Scheme"

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன்' விருது என்று பெயர். இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்தியா முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சூரத் 2-வது இடத்தில் உள்ளது. நவி மும்பை 3-வது இடத்திலும், புதுடெல்லி 7-வது இடத்திலும், ஐதராபாத் 9-வது இடத்திலும், அகமதாபாத் 15-வது இடத்திலும், லக்னோ 44-வது இடத்திலும், பெங்களூர் 125-வது இடத்திலும், மும்பை 189-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 438-வது இடத்தில் உள்ளது.

    அதேபோல சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மராட்டியம் முதல் இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.

    446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி 262-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி 9,500 புள்ளிகளுக்கு 5,794.9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. தூத்துக்குடி 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளன. சென்னை 5-வது இடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் 40-க்கும் மேற்பட்ட இடங்களையே பிடித்திருந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு 45-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 43-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு 44-வது இடத்திலும் சென்னை இருந்தது. தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 9,500 புள்ளிகளுக்கு 4313 புள்ளிகள் கிடைத்துள்ளது.

    தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு உள்ளிட்டவைகளை கையா ளுவதன் அடிப்படை யில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் குவிந்த குப்பைகளில் 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கை யூர் குப்பை கிடங்குகளில் 21 சதவீதம் குப்பைகள் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு நாளைக்கு 6500 டன் குப்பைகள் சேருகின்றன. பொது கழிப்பறைகளில் 77 சதவீதம் தூய்மையாக பராமரிக்கப்ப ட்டுள்ளது.

    அதே நேரத்தில் 95 சதவீதம் அளவுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள் 90 சதவீதம், குடியிருப்பு பகுதிகள் 91 சதவீதம் அளவுக்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் 85 சதவீதம் தூய்மையாக உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி உரம் தயாரிப்பதில் நீண்ட கால திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் சென்னையின் தரம் மேம்படும். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் காய்வாய் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன' என்றார்.

    • நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.
    • பொது மக்களுக்கு மஞ்சபைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    பிரதமர் மோடி வேண்டு கோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை பணிகள்

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1-ந்தேதி இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஊராட்சிகள் முழுவதும் தூய்மைப் பணிகள் நடை பெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலை வர்கள் பங்கேற்று அருகில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்று கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தினர்.

    கலெக்டர் பங்கேற்பு

    பாளை யூனியன் ரெட்டி யார்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய ல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை நிகழ்வு இன்று தொடங்கி வைக்க ப்பட்டது. நாம் வசிக்கும் கிராமம் மற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் தூய்மையாக வைத்து இருக்கும் பட்சத்தில் கிராமம் தூய்மையாகவும், நாடு தூய்மையாகவும் இருக்கும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை சேகரிக்க வருவோர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது இருப்பிடத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இருப்பிடங்களில் மழைநீர் தேங்காமலும், டெங்கு கொசு வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பொது மக்களுக்கு மஞ்ச பைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இதில் பாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், பாலசுப்பிர மணியன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், செயலர் சுப்புகுட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    இதேபோல் நெல்லை மாநகராட்சி யிலும் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக காலையில் தூய்மை பணிகள் நடை பெற்றன.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினை விடத்தில் தூய்மை ப்படுத்தும் பணி நடை பெற்றது. இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல ஒண்டிவீரன் மணி மண்டப வளாகத்தில் நடந்த தூய்மை பணியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள வளாகத்தில் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த தூய்மை பணிக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இந்த மெகா தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவர்களும், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மற்றும் கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 40 பேரும் பங்கேற்ற னர்.

    தொடர்ந்து மருத்துவ மனை வளாகத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் கலந்து கொண்டனர்.

    ×