search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மெகா தூய்மை பணி

    • நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.
    • பொது மக்களுக்கு மஞ்சபைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    பிரதமர் மோடி வேண்டு கோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை பணிகள்

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1-ந்தேதி இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஊராட்சிகள் முழுவதும் தூய்மைப் பணிகள் நடை பெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலை வர்கள் பங்கேற்று அருகில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்று கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தினர்.

    கலெக்டர் பங்கேற்பு

    பாளை யூனியன் ரெட்டி யார்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய ல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை நிகழ்வு இன்று தொடங்கி வைக்க ப்பட்டது. நாம் வசிக்கும் கிராமம் மற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் தூய்மையாக வைத்து இருக்கும் பட்சத்தில் கிராமம் தூய்மையாகவும், நாடு தூய்மையாகவும் இருக்கும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை சேகரிக்க வருவோர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது இருப்பிடத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இருப்பிடங்களில் மழைநீர் தேங்காமலும், டெங்கு கொசு வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பொது மக்களுக்கு மஞ்ச பைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இதில் பாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், பாலசுப்பிர மணியன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், செயலர் சுப்புகுட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    இதேபோல் நெல்லை மாநகராட்சி யிலும் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக காலையில் தூய்மை பணிகள் நடை பெற்றன.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினை விடத்தில் தூய்மை ப்படுத்தும் பணி நடை பெற்றது. இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல ஒண்டிவீரன் மணி மண்டப வளாகத்தில் நடந்த தூய்மை பணியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள வளாகத்தில் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த தூய்மை பணிக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இந்த மெகா தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவர்களும், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மற்றும் கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 40 பேரும் பங்கேற்ற னர்.

    தொடர்ந்து மருத்துவ மனை வளாகத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×