என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி"

    • மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை.
    • அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது.

    பாட்னா:

    பீகாரில் 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில். நவம்பர் 11 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பீகாரின் கட்டிஹார் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை.

    ஒருபக்கம் அவர் அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம் நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.

    ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது.

    நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு.

    மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.

    மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள்.

    அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? என தெரிவித்தார்.

    • பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர்.

    மதுரை:

    மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்த வந்த கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது:-

    மகாத்மா திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை, கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கதர் ஆடையும், பா.ஜ.க.வினர் காவித் துண்டும் அணிவித்தனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம் என்றார்.

    • வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
    • நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

    அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆகும். அதே நேரம் கருப்பு காந்தி என அழைக்கப்படும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினமும் ஆகும்.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காமராஜரை நினைவு கூர்ந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், பாரத ரத்னா திரு. கே. காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.

    அவரது பணிவு, நேர்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதி மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்து ராகுல் வெளியிட்ட பதிவில், "உண்மை, அகிம்சை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைத்த பாபுவின் கொள்கைகள், வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

    தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்." என்று குறிப்பிட்டுளார்.

    மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதவில், "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்துடன் நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

    அவரது எளிமை, பணிவு மற்றும் நமது நாட்டு மக்களின் உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எப்போதும் நம்மை வழிநடத்தும்." என்று தெரிவித்துள்ளார்.   

    • மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதராடை அணிந்து வந்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவ சிலைக்கு கதராடை அணிந்து வந்து மாலை அணிவித்து மலர் தூவி ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

    • நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
    • மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

    மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

    நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி! என்று கூறியுள்ளார். 



    • மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர். 



    • நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது. நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் அண்ணாமலை பாசாங்கு காட்டுகிறார்.
    • பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திமுகவினரின் போராட்டத்தை விமர்சித்து தமிழக அபாஜாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அவரது பதிவில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

    1) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.39,339 கோடியை ஒதுக்கியுள்ளது. ஸ்டாலின் அவர்களே, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் செய்த ஊழலை விசாரிக்க சிபிஐக்கு ஒப்புதல் அளிப்பீர்களா?

    2) அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

    3) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்துவதற்கான தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்ற போகிறீர்கள்?

    இந்நிலையில், "உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று அண்ணாமலையின் விமர்சனத்துக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அவதூறுகளின் அரசனாகிய அண்ணாமலையே, இதுதான் உண்மை!

    தமிழ்நாட்டு அரசியலில் களங்கமாக நிற்கும் அவதூறுகளின் அரசன் அண்ணாமலை திராவிட மாடல் அரசின் மீது அவதூறு பரப்புவதும் பிறகு பல்டி அடிப்பதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு. அந்த வரிசையில் இப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சிக்கியிருக்கிறார்.

    100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் பொய்யைப் பரப்பி, அதனை நிறுவ முயன்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடியைத் தராமல், நாட்களை உயர்த்தவில்லை என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் பாசாங்கு காட்டுகிறார்.

    2024 மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 20-ம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவோம் எனச் சொன்னோம். திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அவசர அவசரமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது ஏன்? திமுக தேர்தல் அறிக்கையில் நாட்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் எனச் சொன்னவுடன் முந்தி கொண்டு ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதே திமுகவின் சாதனைதான். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார்?

    பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுதான் நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தையே சிதைக்கும் வகையில் பாஜக நிர்வாகியை விட்டு அதில் குழப்பத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அது அம்பலப்பட்டதும் அடுத்தடுத்து பொய்களைப் பரப்பி வருகிறார்.

    தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் குறைவான நிதியைப் பெற்றுள்ளதாக அண்ணாமலை தவறான புள்ளி விவரங்கள் அளித்திருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைப் பொறுத்தவரை எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது, எந்த மாநிலம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்பதுதான் முக்கியம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிக மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம்.

    இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். தமிழ்நாட்டில்தான் 86 சதவீதம் பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில் 29 சதவீதத்துக்கு மேல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மாற்றுத்திறனாளிகள். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது.

    இந்த ஆண்டு தமிழ்நாடு நிர்ணயித்த 'மனித உழைப்பு நாட்களான' 20 கோடி நாட்களைக் கடந்து 24 கோடி நாட்களைத் தொட்டுள்ளது. இதை 35 கோடியாக உயர்த்தித் தரவேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    ஏற்கனவே அளிக்கப்பட்ட வேலைக்குச் சுமார் ரூ 1056 கோடி நிதியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று உழைத்த உழைப்பாளிகளின் ஊதியத்தைதான் நாங்கள் கேட்கிறோம். இது எங்களது உரிமை. எங்களது உரிமைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தினமும் ஒரு பொய்யைப் பரப்பி அதில் சுகம் கண்டு வருகிறார் அண்ணாமலை.

    சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார். அதற்கு முன்பு முதலில் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கட்டும். உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
    • திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.

    முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.

    நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.

    ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
    • காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,

    தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். 


    வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது

    இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

    ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.

    சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு

    சியோனி:

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின் போது மகாத்மா அமைதியாக இருந்ததாக அந்த கவிதையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

    மாணவர் இவ்வாறு மகாத்மாவுக்கு எதிரான வாசகத்துடன் கவிதை வாசித்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்

    இந்நிலையில், அந்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக பொறுப்பு என்றும், அவர்களின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை அவமதிக்க குழந்தைக்கு கற்றுக்கொடுத்திருப்பதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா விமர்சித்தார்.

    தன் மீதான விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ முன்மம், இந்த சம்பவம் பள்ளி குழந்தைகள் தொடர்புடையது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். குழந்தைகளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    • 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
    • பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படுகிற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில், 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வரிகள் வருமாறு:-

    * காந்திஜியின் மரணம், நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில், மாயாஜால விளைவுகளை ஏற்படுத்தியது.

    * இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் நாட்டம், வகுப்புவாத இந்துக்களைத் தூண்டிவிட்டது.

    * ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன.

    இந்த வரிகள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

    ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களில் நீக்கங்கள் செய்யப்பட்டன.

    அந்த வகையில், அப்போது 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மாற்றத்தில், மேற்கண்ட வரிகள் நீக்கம் இடம் பெறவில்லை.

    கடந்த ஆண்டு திருத்தம் செய்தபோது, குஜராத் கலவரங்கள், முகலாய அரசசபைகள் (தர்பார்கள்), நெருக்கடி நிலை, பனிப்போர், நக்சலைட்டுகள் இயக்கம் உள்ளிட்டவை நீக்கப்பட்டிருந்தன.

    தற்போது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய வரிகள் உள்ளிட்ட நீக்கப்பட்ட பகுதிகள் பற்றி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் தினேஷ் சக்லானி கருத்து தெரிவிக்கையில், "பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது. இந்த ஆண்டில் புதிதாக எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

    அதே நேரத்தில், அப்போது அறிவிக்கப்பட்ட நீக்கங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிராத வரிகள், தற்போது நீக்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    ×