என் மலர்

    நீங்கள் தேடியது "Mahatma Gandhi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
    • ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.

    இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

    ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.

    1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.

    நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

    காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.

    1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு

    சியோனி:

    மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின் போது மகாத்மா அமைதியாக இருந்ததாக அந்த கவிதையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

    மாணவர் இவ்வாறு மகாத்மாவுக்கு எதிரான வாசகத்துடன் கவிதை வாசித்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற சியோனி பாஜக எம்எல்ஏ தினேஷ் ராய் முன்மம் கைதட்டி வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்

    இந்நிலையில், அந்த மாணவரை வழிநடத்திய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பள்ளி முதல்வர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக பொறுப்பு என்றும், அவர்களின் சித்தாந்தம் மகாத்மா காந்தியை அவமதிக்க குழந்தைக்கு கற்றுக்கொடுத்திருப்பதாகவும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார் குரானா விமர்சித்தார்.

    தன் மீதான விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ முன்மம், இந்த சம்பவம் பள்ளி குழந்தைகள் தொடர்புடையது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார். குழந்தைகளை அரசியலுக்கு இழுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.
    • காந்தி, நேரு வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,

    தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த புத்தகத்தை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

    நேரு உண்மையான ஜனநாயகவாதி, அதனால்தான் அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரைப் போற்றுகின்றன. நேரு காங்கிரஸின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தார். இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு. ஒரே மொழி, ஒரே நம்பிக்கை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டத்திற்கு அவர் எதிரானவர். 


    வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்திருக்க முடியாது என அவர் சொன்னவர். இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்படாது என்று அவர் வாக்குறுதி அளித்தார். தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது

    இன்றைய அரசியல் சூழ்நிலை நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கருணாநிதியை போன்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட காந்தியும் நேருவும் தேவைப்படுகிறார்கள்.

    ராகுலின் பேச்சு நாட்டில் தற்போது பூகம்பத்தை உருவாக்குகிறது. அவர் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, கொள்கை அரசியலைத்தான் பேசுகிறார்.

    சில நேரம் அவர் நேருவை போன்று பேசுகிறார். அதனால்தான் சிலரால் அவர் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகளின் பேச்சுக்கள் கோட்சேவின் சந்ததியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
    • கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு.

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    ஒட்டாவா:

    கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.

    நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என பதிவிட்ட பா.ஜ.க. நிர்வாகியை நீக்கி மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் ராகேஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் அனில் சவுமித்ரா. இவர் சமூக வலைத்தளத்தில், மகாத்மா காந்தி, இந்தியாவின் தந்தை கிடையாது. அவர் பாகிஸ்தானின் தந்தை என பதிவிட்டு இருந்தார். ஏற்கனவே கோட்சே குறித்த பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த கட்சிக்கு இது மேலும் நெருக்கடி ஏற்படுத்தியது.

    இதையடுத்து அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் நேற்று உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்துக்குள் தன்னுடைய பதிவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு கெடு விதிக்கப்பட்டது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த 21ம் நூற்றாண்டின் சவால்களை முன்கூட்டியே மகாத்மா காந்தி அறிந்திருந்தார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். #RamNathKovind #MahatmaGandhi
    சூக்ரே:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  லத்தின் அமெரிக்க நாடானா பொலிவியாவில் 3 நாள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய வளர்ச்சியினை அதிகரிக்க வலியுறுத்த உள்ளது. அங்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்து, பணியாற்றிய காலத்திற்கும், இன்று இருக்கும் காலகட்டத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த 21ம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் , அன்றே மகாத்மா காந்தி கணித்திருந்தார்.  இந்த நூற்றாண்டின் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த காந்தியின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது.



    அன்றைய காலக்கட்டத்தில் நிலைத்த தன்மை, சுற்றுச்சூழல், உணர்திறன் மற்றும் இயல்புக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருந்த அவரது வாழ்நாளில் கூட, நம் தற்போதைய காலத்தின் சவால்களை கணித்தார். ஐநாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் யாவும்  காந்திய தத்துவத்தின் அடிப்படையை கொண்டதாகும்.

    பொலிவியா பகுதியில் 2 இடங்களில் காந்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் தேசத் தந்தையான காந்திஜியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் மற்றும் மிகப்பெரிய மரியாதை செலுத்தும் விதம் ஆகும். காந்தி 20ம் நூற்றாண்டின் மக்கள் செல்வாக்கு நிறைந்த மனிதராவார். காந்தியின் அரசியல் திட்டங்கள், நாட்டின் மீதுள்ள பற்று போன்ற சில முக்கிய கோட்பாடுகள் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கொள்கைகள் இன்றளவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.#RamNathKovind #MahatmaGandhi
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1939-ல் 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார் என்றும் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. #MahatmaGandhi
    புதுடெல்லி:

    தேசத் தந்தை மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

    அதற்கு முன் காலங்களில் அவரது உடல் நிலை எப்படி இருந்தது? என்பது பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இப்போது வெளியாகி உள்ளது.

    இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடத்தும் மருத்துவ கமிட்டி பத்திரிகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காந்தி பற்றிய பழங்கால மருத்துவ அறிக்கையை தேடி அதை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அதில் 1939-ல் மகாத்மா காந்தி 46.7 கிலோ எடை மட்டும் இருந்தார். அவரது உடல் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. உயர் ரத்த அழுத்த நோயில் அவதிப்பட்டு வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவருக்கு 1925, 1936, 1944 ஆகிய ஆண்டுகளில் மலேரியா நோய் தாக்கி இருந்தது. சரி செய்ய முடியாத அளவிற்கு நுரையீரல் அழற்சி நோய் தாக்கி இருந்தது. மேலும் நுரையீரல், இதயத்தில் சுருக்கம், ஆங்காங்கே குழிகள் தோன்றி இருந்தன.

    காந்தி தினமும் அதிக தூரம் நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு 185 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்வார். இவர் 1913-ல் இருந்து 1948-ல் கடைசி வரை 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இது பூமியை 2 தடவை சுற்றி வரும் தூரமாகும்.

    காந்திக்கு 1937 மற்றும் 1940 ஆகிய நாட்களில் இ.சி.ஜி. பரிசோதனை நடத்திய இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன.

    அவருக்கு இயற்கை மருத்துவம் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே இயற்கை மருத்துவ முறைகளை அதிகம் சாப்பிட்டார். அது மட்டுமல்ல தனது உடலையே இயற்கை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொண்டார்.

    மனதை நன்றாக வைத்திருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

    மகாத்மா காந்தி தொடர்பான பல்வேறு மருத்துவ ஆவணங்கள் மூலம் இந்த தகவல்களை திரட்டியதாக இந்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் பல்ராம் பாகவா தெரிவித்தார்.  #MahatmaGandhi