என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி
- உசிலம்பட்டி அருகே உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வீடுதோறும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், ஊராட்சி செயலாளர் மகேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






