search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே யோகா விழிப்புணர்வு பேரணி
    X

    யோகா விழிப்புணர்வு பேரணியை முன்னாள் எம். எல். ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன் துவக்கி வைத்த காட்சி.

    உடுமலை அருகே யோகா விழிப்புணர்வு பேரணி

    • உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது.
    • தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.

    உடுமலை :

    யோகா விழிப்புணர்வு பேரணியை முன்னாள் எம். எல். ஏ., இரா. ஜெய ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார் . துங்காவிஅரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய யோகா விழிப்புணர்வு பேரணியில் உடுமலை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை யோகா ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், மற்றும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் பா. சிரஞ்சீவி நாட்டு நலப் பணித்திட்ட துணை அலுவலர் ம. மாலினி கலந்துஆகியோர் கொண்ட னர். இப்பேரணியானது உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு பற்றிய தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    மேலும் ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியின் கடந்த ஆண்டு நாட்டு நலப்பணிதிட்ட தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு களை எடுத்தும் தண்ணீர் ஊற்றியும் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் பொது அறிவு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×