என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
- குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
குழந்தை தொழிலா ளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மதுரை கூடுதல் தொழிலா ளர் ஆணையர் ஜெயபால் மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆகியோரின் வழி காட்டுதலின்படியும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனு சரிக்கப்பட்டது.
மதுரை, எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் குழந்தை தொழிலாளரி உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழி லாளர் முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம். வாகனங்களில் விழிப்பு ணர்வு. ஸ்டிக்கர்கள் ஓட்டு தல், பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் குழந்தை தொழிலாளர் முறைக்கெதிரான வீதி நாடகம் மற்றும். பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சி கள் சைல்டு லைன் உதவி யுடன் நடத்தப்பட்டது. இதில் மதுரை தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம், மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன், மதுரை தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மலர்விழி, தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழி லாளர் உதவி ஆய்வர்கள். முத்திரை ஆய்வர்கள், மாவட்ட தடுப்பு படை உறுப்பினர்களான சைல்டுலைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கல்வித்துறை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






