என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
    X

    கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

    • கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர்
    • கையெழுத்து இயக்கத்தினை ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்
    பெரம்பலூர்,


    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வு.மான சின்னப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த தொடக்க விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×