search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பையில் மதுபான கடையை அகற்ற கோரி பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம்
    X

    கலெக்டருக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்ட காட்சி.

    அம்பையில் மதுபான கடையை அகற்ற கோரி பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம்

    • அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது
    • 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்ப ப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்புறம் புதிதாக வர உள்ள மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே இருக்கும் பழைய கடையை அகற்றவும் அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத்தொகுதி பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் அம்பை நகர பா.ஜ.க. தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவி மங்கள சுந்திரி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வகனி,அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் தங்கேஷ்வரன்,சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவரும் அம்பை சட்டமன்ற பொறுப்பாளருமான வழக்கறிஞர் ராம்ராஜ் பாண்டியன் கலந்து கொண்டார். நகர பொதுச்செயலாளர்கள் சுகுமார், சுதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராம கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளியம்மாள், நகர பிரபகாரி பால்பாண்டியன்,ஒன்றிய பிரபாகரி முத்து பாண்டி, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×