என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு"

    • பிரதமரின் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
    • இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக கூட்டணி வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    பிரதமரின் SHRI திட்டத்தில் கேரள மாநில இணைய இருப்பதாக, அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருந்தார். ஆனால், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகத்தான் அந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் தற்போது உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையிலான ரகசிய கூட்டணி, பிரதம்ர் SHRI திட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.

    • அமித்ஷா வீடுதான் அதிமுகவிற்கு நீதிமன்றமாக இருக்கிறது.
    • ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.

    தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

    ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.

    11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார்.

    இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள். திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.

    திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. நீங்கள் உங்கள் கட்சியை கவனியுங்கள். நீங்கள் தான் தவளை. பிஜேபி பாம்பு உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதி உள்ள போய்ட்டீங்க.

    தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு.

    அதிமுக தலைவர்கள் இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.

    அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு.

    கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம்" என்று தெரிவித்தார். 

    • வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.

    ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள்.
    • கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான அரசியல் சதி.

    கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) வழக்கில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது.

    இந்த நிலையில் கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்துள்ளது அரசியல் நோக்கம் கொண்டது. இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

    மேலும், மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த வழக்கில் கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அரசியல் சதி இது எனத் தெரிவித்துள்ளது.

    • 2-ந்தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது.
    • பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டின் முதல் நாளான 2-ந்தேதி காலை பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ. (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியார், ஆர்.எஸ்.பி. பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.

    சி.பி.எம். எம்.எல்.ஏ.வும், வரவேற்பு குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். வரவேற்பு குழு செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

    முன்னதாக 1-ந்தேதி தமுக்கம் மைதானத்தில் கட்சியின் வரலாற்று கண்காட்சி, பாசிசத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சி, புத்தக கண்காட்சி போன்றவைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது.

    இந்த கண்காட்சியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தோழர் என்.ராம், பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் போற்றப்படுகிற மற்றும் ஆக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகளின் சுடர் பெறப்படுகிறது.

    குறிப்பாக சென்னையில் இருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச்சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர், அதேபோல மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண் மணி தியாகிகள் நினைவு கொடி பிரசார இயக்கமாக எடுத்து வரப்பட உள்ளது.

    இந்த நினைவுச் சுடர் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1-ந்தேதி மாலை பெறப்படுகிறது.

    2-ந்தேதி காலை மேற்குவங்க மூத்த தலைவர் பீமன் பாசு கொடியேற்றி வைக்கிறார். அன்று மாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தினுடைய தலைசிறந்த கலை குழுக்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.

    திரைக்கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாடு நிறைவு பெறும் 6-ந்தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அன்று மாலை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.

    தமுக்கம் மைதானத்தில் 2-ந்தேதி நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ராஜூமுருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    3-ந்தேதி மாலை கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    4-ந்தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 5-ந்தேதி மாலை நடிகை ரோகினி வழங்கும் ஒரு ஆள் நாடகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் திரைப் பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.

    6-ந்தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முன்னதாக பாண்டி கோவில் அருகில் இருந்து துவங்கும் அணிவகுப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளனர். மாநாட்டையொட்டி அதற்கான அழைப்பிதழை மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.

    • கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா்.
    • மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த தனியாா் கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளித்தும், முழு அபராத தொகையை செலுத்துவதற்கு முன்பாகவே மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    முழு அபராத தொகையை செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிப்பதுடன், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 வரை நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று ெசல்கிறார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், மானாமதுரை ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனிராஜ், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், மூர்த்தி, பாலசுந்தரி ஆகியோர் பேசினர். மானாமதுரை அரசு 

    • ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
    • விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்-அமைச்சரிடம் மனுக்கள் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

    பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னையில் வருகிற 18-ந் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம்.

    குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். கவர்னராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    கவர்னரின் இந்த போக்கு குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவர்னருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது கிரிமினல் வழக்கு தொடர்பானது.

    அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ம் தர அரசியல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உடனிருந்தார்.

    • விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம் 12 இடங்களில் நடக்கிறது.
    • ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-21-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டிய இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே சொத்துவரி அதிகமாக விதிக்கும் நகரமாக ராஜபாளையம் உள்ளது. சென்னையை விட (12.40 சதவீதம்) அடிப்படை வரி விகிதம் அதிகமாக (20.80சதவீதம்) உள்ளது.

    இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நகர்மன்றம் 6 மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவரை வரியும் குறைந்தபாடில்லை. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நிரம்பி உள்ளது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 1-ந் தேதி தேதி முதல் 6-ந் தேதி வரை ராஜபாளையம் நகரில் 12 மையங்களில் போராட்டம் நடத்துவது என்று கிளைச் செயலாளர், நகர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
    • மாவட்டத் தலைநகரம் 65 கி.மீ.தூரம் உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப் நம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

    இந்த கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது எந்த பலனையும் அளிக்காது.

    இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ.தூரம் உள்ளது. இது இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தலுகா அலுவலகம் செல்ல ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது.

    உடனடியாக குடியாத்தம் செல்ல தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலப்பணியை உடனே தொடங்க கேட்டு கொள்கிறோம்.

    5 ஊராட்சிகளை மையப் படுத்தி அகரம்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதுவரையில் மாதனூர் மருத்துவமனையை பயன் படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவி பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிந்திரநாத் பாரதி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், நிர்வாகிகள் அமல்ராஜ், போத்தி, பாக்கியம், மாதர் சங்கத் தலைவி பேச்சியம்மாள், சின்னராசு, சூசையம்மாள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
    • தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணிக்கு அனுமதி கேட்டு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை ஏற்க ஆர்.எஸ்.எஸ். மறுத்தது.

    அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான அனுமதி கவலை அளிக்கிறது. அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி வருந்தத்தக்க விசயம்.

    தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் முதலிலேயே அனுமதி அளித்து இருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது.

    தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    உலகின் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறான பேச்சை பேசி வருகிறார். அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்.

    தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.

    அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. சாதாரண குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை.

    இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்படும்.

    டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு கனிமவள வியாபாரத்தையும் நடத்த வேண்டும். கனிமவள கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    மக்கள் நல பணியாளர்கள் பணியை ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ரத்து செய்தார்கள். ஒரு அரசு ஒரு திட்டத்தை வகுக்கும்போது, மற்றொரு ஆட்சி அமையும்போது அதில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்ய வேண்டுமே தவிர ரத்து செய்யக்கூடாது.

    தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பாளை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு நிர்வாகிகள் குழந்தை வேலு, நாராயணன், முருகன், பழனி, மாநில குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×