search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை திருடி உள்ளார்- சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு
    X

    கர்நாடகாவில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை திருடி உள்ளார்- சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு

    • ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சிகுருவாடா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

    அவர் ஆட்சியில் இருந்தபோது அறிவித்த 600 வாக்குறுதிகளில் 6 வாக்குறுதிகளை கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ 2.27 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆந்திர மக்கள் இதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

    முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து 3 வாக்குறுதிகளையும், கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 2 வாக்குறுதிகளையும், பா.ஜ.க அளித்த ஒரு வாக்குறுதி என மொத்தம் 6 வாக்குறுதிகளை திருடி தற்போது அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×