search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Desam Party"

    • வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
    • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.

    தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.

    வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.

    ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.
    • கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த வாரம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது மர்ம நபர்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்களை வீசினர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.

    இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வெமுலா துர்கா ராவ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாததால் துர்கா ராவ் மனைவி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் விஜயவாடா போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் வக்கீல் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.

    இதனை அறிந்த போலீசார் துர்கா ராவை நேற்று விடிவித்தனர். இது குறித்து துர்கா ராவ் கூறுகையில், கல்வீச்சு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீசாரிடம் பலமுறை கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை.

    துப்பாக்கியை காட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். தெலுங்கு தேசம் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் என் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
    • சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.

    கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.


    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

    விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

    இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

    தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    • பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோலிகாபுடி சீனிவாஸ் போட்டியிடுகிறார்.

    இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.

    அப்போது கீழே நின்று கொண்டு இருந்த பெண்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    இதனால் கடுப்பான சீனிவாஸ் அங்கிருந்த பெண்களை சைத்தான் சைத்தான் என கூறிவிட்டு வாகனத்தை வேறு ஊருக்கு ஓட்டுமாறு கூறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
    • நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.

    வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.

    • தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது.
    • சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். மீதமுள்ள 57 இடங்களை நிலுவையில் வைத்துள்ளது.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் கட்டாயம் 7 இடங்களுக்கு மேல் ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. அடம்பிடித்து வருகிறது. ஆனால் 4 முதல் 5 தொகுதிகளை ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சில நாட்களில் பா.ஜ.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    தேர்தல் நெருங்கி வருவதால் விரைவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என நம்புகிறோம் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை.
    • ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பா ஜனதா, தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா ஆகியவை கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாண் ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 5 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கேட்ட தொகுதிகளை தர வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் 118 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடுவதற்காக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், இணைந்து வெளியிட்டனர். ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


    பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை. கேட்ட தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை சந்திரபாபு நாயுடு திணற விட்டுள்ளார்.

    பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் மீதமுள்ள தொகுதிகளிலும் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி கட்சியினரே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கு தேசம் கட்சி 94 வேட்பாளர்ளையும், ஜனசேனா வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது.

    குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நகரியில் அமைச்சர் ரோஜாவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.சி காளி முத்துகிருஷ்ணம்மா மகன் பானுபிரகாஷ், பலமனேரில் முன்னாள் அமைச்சர் அமர்நாத்தும், சித்தூரில் குருஜால ஜெகன்மோகன், கங்காதர நெல்லூரில் வி.என்.தாமஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

     திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி. ராமராவ் உருவ சிலைகள் மாநிலம் முழுவதும் உள்ளன.

    இந்த நிலையில் பாபட்லா மாவட்டம் பர்திபுடி சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த என்.டி. ராமராவ் சிலையின் தலையை இரவு மர்ம நபர்கள் துண்டித்து கீழே வீசி சென்றனர்.

    இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி. ராமராவ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிலையின் தலையை துண்டித்தவர்களை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கூறுகையில்:-

    வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற கவலையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுபோன்ற செயல்களால் என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
    • மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-

    எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

    ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
    • பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

    அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×