என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டி இல்லை- நடிகர் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவு
- பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
- பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்