என் மலர்
சுவிட்சர்லாந்து
- சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
- சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார்.
- நெஸ்லே சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
- இவர் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ன்:
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் நெஸ்லே. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர் லாரன்ஸ் பிரெக்சி.
விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் சி.இ.ஓ. ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. நிறுவனம் நடத்திய விசாரணையில் ஊழியர் உடனான ரகசிய உறவு தெரிய வந்தது.
இந்நிலையில், சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பிலிப் நவ்ராட்டில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
- இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
சூரிச்:
டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். இறுதிச்சுற்றில் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3வது இடம் பிடித்தார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என பப்ளிக் வென்றார். 2வது செட்டை 6-4 என அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என வென்ற பப்ளிக் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஆர்தர் கசாக்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பப்ளிக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பப்ளிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேனுவல் செருண்டலோவை சந்திக்கிறார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுவான் மேனுவல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜுவான் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நார்வேயின் காஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீரர் பப்ளிக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பப்ளிக் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கோம்சேனாவை சந்திக்க உள்ளார்.
- சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சுவிஸ்:
சுவிட்சர்லாந்தில் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டீபன் ஸ்ட்ரிக்கர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய காஸ்பர் ரூட் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது
- கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது.
ஜெனீவா:
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்த நிலவரப்படி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அகதிகளாக மாறியவர்கள் எண்ணிக்கை ஆகும். அவர்களில் சிலர் கடந்த ஆண்டு வீடுகளுக்கு திரும்பிய போதிலும், புதிதாக வேறு சிலர் வெளியேறி விட்டனர்.
ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ குடியேறும் நோக்கத்தில் பலர் வெளியேறியதாக பணக்கார நாடுகளில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், தங்கள் நாட்டின் எல்லையை தாண்டிய மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் அண்டை நாடுகளில்தான் உள்ளனர்.
அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும் அகதிகளாக மாறினர் என தெரிவித்துள்ளது.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டியில் வென்றார்.
ஜெனீவா:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுபர்ட்
ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ஜோகோவிச் சுதாரித்துக் கொண்டு ஆடினார். அடுத்த இரு செட்களை 7-6 (7-2), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜெனீவா ஓபன் தொடரில் பட்டம் வென்றது 100வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
ஜெனீவா:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்,






