என் மலர்
உலகம்

ஊழியருடன் தொடர்பு: சி.இ.ஓ.வை அதிரடியாக நீக்கியது நெஸ்லே
- நெஸ்லே சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
- இவர் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ன்:
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் நெஸ்லே. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர் லாரன்ஸ் பிரெக்சி.
விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் சி.இ.ஓ. ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. நிறுவனம் நடத்திய விசாரணையில் ஊழியர் உடனான ரகசிய உறவு தெரிய வந்தது.
இந்நிலையில், சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பிலிப் நவ்ராட்டில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story






