என் மலர்
நீங்கள் தேடியது "newyear celeberation"
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
- இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
பெர்ன்:
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
- வாலிபர்கள் வாகனங்களில் பறந்து சாகசம் செய்வது, மின்னல் வேகத்தில் செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
- புத்தாண்டுக்கு முந்தையை நாள், அன்றிரவு, மறுநாள் ஆகிய தினங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர்:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால் ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப்பலிகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.சில வாலிபர்கள் வாகனங்களில் பறந்து சாகசம் செய்வது, மின்னல் வேகத்தில் செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே 2023 தொடக்கத்தில் விபத்து, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் ஆண்டை வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பூர் மாநகர போலீசார் தயாராகி உள்ளனர். அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் புத்தாண்டையொட்டி செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
புத்தாண்டுக்கு முந்தையை நாள், அன்றிரவு, மறுநாள் ஆகிய தினங்களில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகள் தவிர்த்து கூடுதலாக அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.






