என் மலர்
நீங்கள் தேடியது "ஐநா மனித உரிமைகள் ஆணையம்"
- புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கமும் கண்காணிக்கப்படுகிறது.
- குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.
இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2014 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வட கொரியாவிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளதாவும், தண்டனைகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
அறிக்கைப்படி, 2015க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.
வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், "கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது. அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
- சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
- சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார்.
- பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ள்ளார்.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பல்வேறு வளரும், பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த யுஎன்- எய்ட் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். மேலும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஐ.நா. அமைப்புகளுக்குள் "அமெரிக்க எதிர்ப்பு" இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்று நேற்று டிரம்பை சந்தித்ததும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளது தற்செயலானது அல்ல.

UNRWA ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதனை UNRWA திட்டவட்டமாக மறுத்தது. இதைத்தொடர்ந்து 2024 இல் அமெரிக்கா UNRWA நிதியை தாற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் டிரம்ப் தற்போது அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர்.

லட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் UNRWA நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- யூத விரோதத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.
- இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது," என குறிப்பிட்டுள்ளார்.
"மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை பேய்த்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது".
"எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!" என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.







