search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே  அரசு பஸ்சை சிறைபிடித்து  கிராம மக்கள் போராட்டம்
    X

    அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம். 

    திண்டிவனம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருகிறார்கள்.
    • பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏப்பாக்கம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர்

    இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து ஏப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் தடம் எண் 23 மற்றும் 21 ஆகிய பஸ்கள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது 6பி தொடர்ந்து சென்று வரும் நிலையில் அந்த பஸ்சும் ஒரு சில நாட்களில் ஏப்பாக்கம் கிராமத்திற்கு வரவில்லை எனவும் மாலை நேரங்களில் பேருந்து சரி வர வராததால் இரவு 7 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் வீட்டிற்கு வருவதாகவும் கூறி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பி அரசு பஸ்சை சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிட ப்பட்டது.இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×