search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal"

    • தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும்.

    சென்னை:

    நகராட்சிகளின் பொது சுகாதார பிரிவில் ஒரே பணிகளை செய்வதற்கு வேறு வேறு துறைகளை சேர்ந்த இரு அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து நகராட்சிகளிலும் தற்போது துப்புரவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. இதற்காக மாநில சங்கம் நகராட்சி துறை அமைச்சர், துறை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. இந்த நிலையில் சிறப்புநிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை முயற்சி செய்து வருகிறது.

    இது குறித்து, தங்களது கருத்துகளை, எதிர்ப்பினை தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் மாநில சங்கம் தனது கடிதத்தின் மூலம் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு தெரிவித்து உள்ளது. அக்கடிதத்தில் துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும். நோய் தடுப்பு பணி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், உரிமத் தொகை வசூலித்தல், பிறப்பு - இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணி அனைத்தையும் துப்புரவு அலுவலர், நகராட்சியின் பொது சுகாதார பிரிவிற்கு தலைமை யேற்று செய்து வருகிறார்.

    இந்நிலையில் துப்புரவு அலுவலர் செய்து வரும் அதே பணிகளை செய்திட பொது சுகாதாரத்துறை, தனது மருத்துவர்களை நகர்நல அலுவலர் என்ற பணியிடத்தில் நகராட்சிகளில் விரைவில் நிரப்பிட உள்ளது. ஒரு நகராட்சியில் ஒரு பணியினை செய்திட வேறு வேறு துறையினை சார்ந்த இரு அலுவலர்கள் எதற்கு என்றும், துப்புரவு ஆய்வாளர்களின் ஒரே ஒரு பதவி உயர்வு துப்புரவு அலுவலர் மட்டுமே. அதையும் நீர்த்து போக செய்யும் விதத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் இச்செயல் உள்ளது என்றும், பிறிதொரு துறையான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிலிருந்து நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களில் மருத்துவர்களை நியமித்திடுவதை தவிர்த்திடுமாறும் பொது சுகாதார இயக்குநருக்கு வழங்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து மாநில சங்க தலைவர் கூறுகையில் பொது சுகாதார துறையில் உள்ள மருத்துவ அதிகாரிகள், பதவி உயர்வு பெறும் நோக்கத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள நகர்நல அலுவலர் பணியிடங்களுக்கு வருகின்றனர் என்றும், இதனால் ஏற்கனவே அப்பணிகளை செய்து வரும் துப்புரவு அலுவலர்களின் நிலை தான் என்ன, அவர்களுக்குரிய பணி தான் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுகிறது. ஒரே பணி செய்ய இரு அலுவலர்கள் அதுவும் ஒரே நகராட்சியில், தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் தேவை இல்லை. எனவே துப்புரவு அலுவலர் பணியிடம் உள்ள நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடம் தேவை இல்லை என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சினை குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை இதில் உடனடியாக தகுந்த நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குன்னூர் டோபிகானா பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு
    • ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் விதிமீறிய கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நகராட்சியில் அதிகாரிகள் முறையாக இல்லாததே இதற்கு காரணம். இதனால் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக சிலர் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

    அவர், திடீரென அலுவலகம் முன்பு வைத்து தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    இதனை அங்கு இருந்த ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடடினயாக ஓடி சென்று, அதனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது, அவர் டோபி கானா பகுதியில் சிலர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    எனவே இவர்களை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களாகவே குன்னூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிங்கள் அதிகளவில் கட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது.
    • முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது. இந்த உரக்கிடங்கு வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., துணை செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், செம்மாண்டம்பாளையம் சக்திகுமார் ,நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது.
    • நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியல் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிக்கு நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய் மூலம் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோபி செட்டி பாளையம் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக வெளியேறது. மேலும் அந்த தண்ணீர் அருகில் இருந்த கால்நடை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறியது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர்அவர்கள் குடிநீரை நிறுத்தி விட்டு குழாய் உடைப்பை செய்தனர். பின்னர் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் குழாய் உடைப்பால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியமாக மாறியது.

    • காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

    இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.35 கோடி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ. 8 கோடி என நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டமும் இப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கை கோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது .

    இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விரிவான மேம்பாட்டுத் திட்டமும், என்.எச்-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம் நகராட்சி பகுதி வளர்ச்சித் திட்டத்திற்காக 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக் குப்பம், திம்மசமுத்தி ரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய சி.எம்.டி.ஏ. திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, இறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுயடியார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான ப. ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான யூ.எஸ். வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேலாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • கீழக்கரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார். புகார் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கீழக்கரையில் 2மணி நேரம் திடீர் ஆய்வு செய்தார், மாலாங்குண்டு, வடக்குத்தெரு மேல்நிலை குடிநீர் தொட்டி, கீழக்கரை பஸ் நிலையம், மீன் மார்க்கெட் ஆகியவற்றின் நிலை குறித்து பார்வை யிட்டார்.

    நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த பணிகள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மதுரை மண்டல நிர்வாக இயக்குநர் சரவணன், நகராட்சி பொறியாளர் மனோகரன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட பலர் உடன் சென்றனர்.

    நகராட்சி நிர்வாக இயக்குநரின் ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னதாக தகவல் அளிக்கப்பட்டும், அவரது வருகை சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தமாக புகார் மனு அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு வந்திருந்தனர். ஆனால் நிர்வாக இயக்குனர் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பி விட்டதால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது
    • நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    கூட்டுடன்காடு ஊராட்சி இந்திராநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மறவன்மடத்தில் ஊராட்சி தலைவர் லில்லிமலர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    குளியன்கரிசலில் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் முக்கனி தலைமை தாங்கினார். சேவைக்காரன் மடத்தில் ஊராட்சி தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அல்லி குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஆனந்தி மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    கீழத்தட்டப்பாறையில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பத்மா பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கோரம்பள்ளத்தில் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கட்டாலங்குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் தலைவர் ரம்யா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. குமாரகிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டாம்புளியில் நடைபெற்றது. இதில் குமாரகிரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • முதுகுளத்தூரில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
    • கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜஹான் தலைமையில், நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார்.

    மோகன்தாஸ் (7-வது வார்டு தி.மு.க.) பேசுகையில், சங்கராண்டி ஊரணி பகுதியில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளதால் டூவீலர் கூட செல்லமுடியவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர்: அந்த சாலையில் மக்கடம் அடிக்கப்படும்.

    மோகன்தாஸ்: முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சேகர் (10-வது வார்டு): தினசரி சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டும். கழிவறையில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும்.

    பால்சாமி (9-வது வார்டு): கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. சேர்மன்: கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.
    • இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.

    இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

    • திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை சேர்மன் கான் முஹம்மது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தமது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    வர இருக்கும் பருவமழைையயொட்டி நகர் பகுதி மட்டுமில்லாமல் ஏனைய பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலமும், சுகாதார பணியாளர்கள் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்த சேர்மன், கடந்த கால நிர்வாகத்தை காட்டிலும் தற்சமயம் நான் பொறுப்பேற்றவுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான தெரு விளக்கு மேம்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர் பகுதிகளிலும் மின்விளக்குகளை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உள்ளேன். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.

    இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.

    குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.

    ×