search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Council"

    • 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வா் வசந்தி வரவேற்றாா். கல்லூரியின் தாளாளரும், கோவை மண்டல வீட்டுவசதி துணைப் பதிவாளருமான அா்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், பேரவைத் தலைவியாக ஸ்ரீநிதி (பி.காம்., 3-ம் ஆண்டு), துணைத் தலைவியாக ஹரிணி (பி.எஸ்சி., கணினி அறிவியல் 3-ம்ஆண்டு), செயலாளராக சுரேகா (பி.காம்., 2-ம் ஆண்டு) ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.

    விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை லாா்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் மனித வளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிா்வாகி டெய்ஸி மேரி பேசியதாவது:- மாணவி களுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். படிப்புக்கு வயது தடை இல்லை. படிப்பை நம்மிடம் இருந்து யாரும் வாங்க முடியாது என்றாா்.

    நிகழ்ச்சியில் எத்தியோப்பியா நாட்டு பேராசிரியா் கருணாகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

     உடுமலை, ஜூலை.30-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது. துறைச் செயலருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    துறையின் இணைச் செயலருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்ந்து எடுத்தனர். பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலருக்கான போட்டி நடைபெற்றது.

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்து எடுத்தனர்.இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாகத் துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலர் மற்றும் மகளிர் செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ஆ.யுவராஜ், துணைத்தலைவராக சை.முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக சி.கோகுல்நாத், மகளிர் செயலராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

    தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

    அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

    எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும், ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823-ல் பிறந்தார். கருணை ஒன்றே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார்.

    அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன் மார்க்கத்தை நிறுவினார்.

    இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினர்.

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவினார்.

    அவர் ஏற்றிய அடுப்பு நான்கு நூற்றாண்டுகள் கடந்தும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

    மனு முறை கண்ட வாசகம், ஜீவ காருண்ய ஒழுக்கம் ஆகிய உரை நடைகளை எழுதினார். இவர் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

    இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    பசிப்பினி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

    ஆன்ம நேய ஒருமைபாட்டு "ஒளி" இன்றும் அறியாமையை நீக்கி "அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப் பெருங்கருணை, அருட்பெரும் ஜோதி" அன்பை ஊட்டி வருகின்றது.

    அவர் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் நாள் (இன்று ) இனி ஆண்டு தோறும், தருபெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும், என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசானது வடலூர் சத்தியஞான சபைை பக்தர்கள் வந்து செல்வதற்கான உள் கட்டமைப்புகளை அதிகபடுத்தியும், சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் மகான் வள்ளலார் பெயரை புதுச்சேரி விமான நிலையத்திற்கு சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை சேர்மன் கான் முஹம்மது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தமது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    வர இருக்கும் பருவமழைையயொட்டி நகர் பகுதி மட்டுமில்லாமல் ஏனைய பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலமும், சுகாதார பணியாளர்கள் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்த சேர்மன், கடந்த கால நிர்வாகத்தை காட்டிலும் தற்சமயம் நான் பொறுப்பேற்றவுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான தெரு விளக்கு மேம்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர் பகுதிகளிலும் மின்விளக்குகளை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உள்ளேன். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
    • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

    எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை குறைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் பவித்ராஷியாம்ராஜா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனாகுழந்தைவேல் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ராமலிங்கம்,நகர்நல அலுவலர் சரோஜா மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தலைவரின் நேர்முக உதவியாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.

    ராஜபாளையம் நகராட்சி யில் குடிநீர் கட்டணம் 2022-23 முதல் சதுர அடிக்கு ஏற்ப பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை பொது மக்களின் நலன் கருதி குடியிருப்புகளுக்கு 500சதுர அடிக்கு குறைவானதுக்கு மாதம் ஓன்றுக்கு ரூ.100 என்றும், 500 சதுர அடிக்கு மேல் ரூ.150 என்றும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 300 சதுர அடிக்கு குறைவானதுக்கு ரூ.200 என்றும், 300 முதல் 500 சதுர அடிவரை ரூ.300 என்றும், 501 முதல் 1000 சதுர அடிவரை ரூ.450 என்றும், 1001 சதுர அடிக்கு மேல் ரூ.570 என்றும் நிர்ணயம் செய்ய தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா அதிரடியாக கொண்டு வந்த குடிநீர் வரி குறைப்பு தீர்மானம் உட்பட73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குடிநீர் கட்டண குறைப்பு தீர்மானத்தை தி.மு.க உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

    • முதுகுளத்தூர் பேருராட்சி மன்றக்கூட்டம் நடந்தது.
    • கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரு ராட்சி மன்றக்கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கவுன்சிலர் மோகன்தாஸ்:-

    தி.மு.க. 7-வது வார்டு வீடு கட்டுபவர்கள் சன்சைடு மற்றும் வாசல்படிகளை ரோட்டில் கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பேரூராட்சி சார்பில் சர்வேயர் நியமிக்க வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:- சர்வேயர் நியமிக்க நடவடிக்கை நிலையில் தற்போது கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உம்முகர்தா (தி.மு.க.):-

    கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தவுடன் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் கால்வாயிலே கோழிகளால் கொத்தி தள்ளிவிடப்படுகிறது.

    தலைவர் ஷாஜகான்:-

    4 கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சுந்தரம்பாள் (தி.மு.க.):- கழிவுநீர் தேங்குவதை தடுக்க ஜே.சி.பி. மூலம் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:-

    15-வது வார்டில்தான் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேலை நடந்து வருகிறது. அதனை நேரில் பார்வையிட்டு வேலை சிறப்பாக நடக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    மோகன்தாஸ் (தி.மு.க.):-

    தினசரி மார்க்கெட்டில் ஏலம் விடாமல் நிறுத்தப் பட்டால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.தலைவர் ஷாஜகான்:-

    இது தொடர்பாக டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவகம் மூலம் மனுக்கள் வந்துள்ளன. தினசரி சந்தை ஏலம் விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மீன் மார்க்கெட் கழிப்பறை ஏலம் விடுவதும் நிறுத்தப்பட உள்ளன.

    தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் ரூ.5 கட்டணமாக வாங்கும் நிலை இருந்தும், முதுகுளத்தூரில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது.

    எனவே கட்டணம் நிர்ணயம் செய்தபின் ஏலம் விடப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    முடிவில் முனியசாமி நன்று கூறினார்.

    ×