என் மலர்

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், ரமணிரோஸ், விஜயன், ஏசு ரெத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜாண்லீபன், பேரூர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், ராஜூலின் ராஜகு மார், சகாய கிறிஸ்துதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெய சீலன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்ட னர். நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் இளைஞர் அணியினரை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோச னைகள் வழங்க குமரிக்கு வருகை தரும் இளைஞரணி செயலாளரும், அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சியில் திரளான இளை ஞர்கள் கலந்துகொள்வது. டிசம்பர் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது, போக்குவரத்து சுங்கச்சாவடி கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துக்கொள்வது, மந்தமாக நடந்து வரும் நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பால பணியால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தண்டவாள விரிவாக்கம் மற்றும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தென்னக ரெயில்வே துறையை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் முழுதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய நிர்வாகிகள், தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு மற் றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அவை தலைவர்கள் தங்க–ராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகருக்கு வருகிற 6-ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பேசியதா–வது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி விருதுநகர் வருகை தர உள்ள நிலையில் அன்றைய தினம் விருதுநகர் முழுவதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கும் நிலையை ஏற்ப–டுத்த வேண்டும். மேலும், அன்று காலை 9 மணிய–ளவில் சூலக்கரை மேட்டில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவரை வரவேற்ப–தற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் திர ளாக பங்கேற்க வேண்டும்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்பு மாலை கழக முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய தாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை தருகிற 6-ந்தேதிதான் நமக்கெல்லாம் தீபாவளி. அவரது வருகையை நாம் எல்லோரும் திருவிழாவாக கொண்டாடும் வகையில் அமைய வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையி–ல் தாமிரபரணி நதிக்கரையில் தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சேலத்தில் 2-வது தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய நம்மை தயார்படுத்த தான் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தனுஷ்குமார் எம்.பி., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன் மற்றும் விருதுநகர் நகராட்சி தலை–வர் மாதவன் உள்ளிட்ட நகரசபை தலைவர்கள், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்ளிட்ட யூனியன் தலைவர்கள், பேரூராட்சி தலை வர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும்.
    • கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வல்லம்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி வல்லம் பேரறிஞர் அண்ணா சீரணி கலையரங்கில் திமுக பொதுக்கூட்டம் நடந்தது.

    தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு ஒன்றியம், மற்றும் வல்லம் பேரூர் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணைத் தலைவரு மான அருளானந்த சாமி வரவேற்றார்.தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்.

    டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம் .ராமச்சந்திரன் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்று பெறும் என பேசினார்.

    இதில் மாநில நிர்வாகிகள் இறைவன், எல்.ஜி அண்ணா,தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி சிங்.இரா.அன்பழகன்,சுந்தர்ராஜ், துணை செயலாளர் கோவிந்த ராஜ், ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் வல்லம் நகர செயலாளர் கல்யாண சுந்தரம் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் 27-ந்தேதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாடு குறித்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் மேலும் எழுச்சியுடன் கொண்டாடுவது மற்றும் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் எழுச்சி யுடன் பங்கேற்று சிறப்பிப் பது உள்ளிட்ட கட்சி ஆக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ள குறிஞ்சி திருமண மஹாலில் நடக்கிறது.

    மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் செயலாளர், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.
    • மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவஸ்தா சாவடி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்று விழா நடந்தது.

    இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறும்போது,

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைகள், லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவும், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் தான் அ.ம.மு.க. தொடங்கப்பட்டது.

    மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைய குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வை ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும் உள்ளார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான உமா மகேஸ்வரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் நடந்த அதி.மு.க.வின் மாநாட்டில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பாட்டு பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டதை அனைத்து அ.தி.மு.க.வின் தலைவர்களும் ரசித்து ஏளனமாக கைதட்டி சிரித்து உற்சாகபடுத்தினர். லட்சக்கணக்கான அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மத்தியில் இப்படி பேசியதை பார்த்த எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாநாடு நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ, தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர செயலாளர் சுப்பராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய குழு சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரளான பேர் இதில் கலந்து கொள்ள வேண்டும். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகி களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்துள்ள ஏற்பாடு களையும் கேட்ட றிந்தார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட வி.சி.க. நிர்வாகிகளுடன் புதிய மாவட்ட செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வி.சி.க. வடக்கு மாவட்ட செயலாளராக இளைய கவுதமன், தெற்கு மாவட்ட செயலாளராக பாலையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளைய கௌதமன் அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தார். மூத்த உறுப்பினரான மண்டேலா மாதவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    புதிய மாவட்ட செயலாளருக்கு ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, சுண்ணாம்பிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி மண்மேல் சந்திரன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரவி, காட்டாம்பூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை இளைய கவுதமன் சந்தித்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    சீர்காழி:

    மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo