

கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்றுள்ளார்.
அங்கு, சிறையில் இருந்து வெளியே வந்த தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விஜயை சந்தித்துள்ளனர்.
கட்சி அலுவலத்தில், மதியழகன், பவுன்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார்.