என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமின்"

    • தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விஜயை சந்தித்துள்ளனர்.
    • கட்சி அலுவலத்தில், மதியழகன், பவுன்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார்.

    கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்றுள்ளார்.

    அங்கு, சிறையில் இருந்து வெளியே வந்த தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விஜயை சந்தித்துள்ளனர்.

    கட்சி அலுவலத்தில், மதியழகன், பவுன்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார்.

    • எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
    • மகளை இழந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.

    மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்... நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படி என்று நினைக்கும் போது,வருத்தமாக இருக்கு. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கான நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றார். 

    • புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    • முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
    • சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

    இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.

    • பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    • நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
    • தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் கைதானார். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என கூறிய ஸ்ரீகாந்த் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, சிறையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது ஏன்? என்ன பலரும் கேள்வி எழுப்பினர். வருமான வரி முறையாக செலுத்திவரும் நபர் என்பதால் சிறையில் முதல் வகுப்பு சலுகை ஸ்ரீகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மேலும் வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • விபத்து ஏற்படுத்திய லம்போர்கினி கார் பறிமுதல்
    • கார் மோதியதில் காயமபட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிய தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான தீபக்கிற்கு சூரஜ்பூரில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி கார் நின்றது.

    விபத்துக்கு பின்பு எடுக்கப்பட்ட வீடியோவில், "விபத்துக்குள்ளான சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஓடுகின்றனர். காரை ஓட்டிய நபரிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்க, அதற்கு காரை ஓட்டியவர், 'இங்கே யாராவது இறந்தார்களா?' என்று அலட்சியமாக பதில் கூறினார்.

    கார் மோதியதில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    • 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
    • 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.

    சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

    இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

    • இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

    சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீசாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாகரையும், அவரது வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

    அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும், போலீசார் கூறிய குற்றச்சசாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    • நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் உள்ள 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் சிறப்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • ‘நியோ மேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரையை தலைமை யகமாக கொண்டு 'நியோ மேக்ஸ்' பிராபர்ட்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்பட பலர் உள்ளனர்.

    இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதந் தோறும் அதிக வட்டி கிடைக்கும் என்றும், திட்டத்தின் முடிவில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரப் படுத்தினர்.

    இதை நம்பி ஆயிரக் கணக்கானோர் தங்களது பணத்தை இந்த நிறுவ னத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கூறியபடி உரிய தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஏராளமானோர் புகார் செய்தனர்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இந்த வழக்கில் சில இயக்குநர்கள் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் சிலர் தலைமறை வாக உள்ளனர்.

    இந்த நிலையில் இவ் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இசக்கிமுத்து, சகாய ராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜோதி முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாள்தோறும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

    • இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.

    இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கணையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் சில நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். ரத்த பரிசோதனை, எக்கோ, எச்ஆர்சிடி சோதனை, வயிற்றுக்கான யுஎஸ்ஜி சோதனை, கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல், வயிற்று வலிக்கான சோதனை, எம்ஆர்சிபி, மூளைக்கான எம்ஆர்ஐ, எம்ஆர்வி, எம்ஆர்ஏ உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    மூளைக்கான எம்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் க்ரோனிக் லக்யுனே இன்ஃபார்ட் கண்டறியப்பட்டுள்ளது.

    முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது.

    எம்ஆர்சிபி சோதனையில் பித்தப்பையில் பல பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது நாளடைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும் என்றும் இதனால் உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவ அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொழுப்பை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படும்.

    உரிய மருந்துகளை முறையாக எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, கணைய அழற்சி, ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.

    இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கு உரிய சிகிச்சை எடுக்கம் வகையில் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×