search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala Bus"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கம்பம் அருகே கேரள பஸ் மீது கல் வீசிய அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ADMK
    கூடலூர்:

    கம்பம் அருகே கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பொன்மலைச்சாமி (வயது45). அ.தி.மு.க. பிரமுகர். மேலும் கூடலூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து குமுளிக்கு கேரள அரசு பஸ் வந்தது. கூடலூர் பஸ் நிலையத்தில் நின்றபோது திடீரென பொன்மலைச்சாமி டிரைவரை பார்த்து சத்தம்போட்டார். மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆவேசமாக பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கினர். அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாஜகான் வழக்குப்பதிவு செய்து பொன்மலைச்சாமியை கைது செய்து கல் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. #sabarimala
    செங்கோட்டை:

    கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை கண்டித்தும், அனைத்து வயது பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் சசிகலா என்பவரை நேற்று இரவு கேரள அரசு கைது செய்தது.

    இதனை கண்டித்து கேரளாவில் பா.ஜ.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் எந்த வாகனமும் செல்லவில்லை.

    தினமும் செங்கோட்டை வழியாக ஏராளமானவர்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். இன்று வாகனங்கள் இயக்கப்படாததால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கேரளாவில் இருந்து நெல்லை வந்த அரசு பஸ்கள் அனைத்தும் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கும். #sabarimala
    ×