search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச் சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், விருது நகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, பட்டா மாறுதலுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதன் நிலவரங்கள், இசேவை மையங்கள் வட்டார அளவில் தற்போது வரை பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள்,

    நிலுவை விவரங்கள், பாலின விகிதம், ஊரக, நகர்ப்புறப் பகுதி களில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் நோய் வாய்ப்பட்டு பிறந்த குழந்தைகள் சேர்க்கை மற்றும் அதற்கான காரணங்கள், கருவுற்ற வளர் இளம் பெண்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி, தாய்மார்கள் இறப்பு,

    அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள், RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சை யின் செயல்திறன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோய் கண்டறியப்படு வதின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காந் பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும்-48,

    உழவர் சந்தைகளின் செயல்பாடு கள், ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்திறன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை புதிய தொழில்முனைவோர் மற்றும் நடுத்தர மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல் படுத்தப் பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவை யில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தி னர்.

    நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, தனுஷ் எம்.குமார் எம்.பி., ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்,

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாணடியன், ரகு ராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் , விருதுநகர் நகர் மன்றத்தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ அலுவலர்கள் உட்பட உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.

    நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
    ×