search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
    X

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வருகின்ற 13, 14-ந் தேதிகளில் நடைபெறுகின்ற திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.

    இதனை முன்னிட்டு செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவல கத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்டக் நிர்வாகிகள், சார்புஅணி செயலாளர்கள் நகர, ஒன்றிய நிர்வாகிகள், , வட்டக் செயலாளர்கள், நகரச் சார்பணி செயலாளர்கள், , முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×