என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
    X

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

    • தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    ஊட்டி,

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 10-ந் தேதி(இன்று)தேவாலா பஜார் பகுதியில் டான்டீ தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயர்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, காசிலிங்கம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எல்.பி.எப் தொழிற்சங்கம் சார்பில் மாடாசாமி, அருண்குமார், அண்ணாதுரை, கணபதி, அன்பழகன், சந்திரன், மகேந்திரன், தமிழ்வாணன், ஏ.ஐ.டி.யு.சி. பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. யோகநாதன், சி.ஐ.டி.யு சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×