search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா
    X

    காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    காதுகேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    Next Story
    ×