search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி விமான நிலையத்திற்கு வள்ளலார் பெயரை சூட்ட வேண்டும்- வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள்
    X

    வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள்.

    புதுச்சேரி விமான நிலையத்திற்கு வள்ளலார் பெயரை சூட்ட வேண்டும்- வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள்

    • சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    • சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும், ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823-ல் பிறந்தார். கருணை ஒன்றே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார்.

    அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன் மார்க்கத்தை நிறுவினார்.

    இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினர்.

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்திய தர்ம சாலையை நிறுவினார்.

    அவர் ஏற்றிய அடுப்பு நான்கு நூற்றாண்டுகள் கடந்தும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

    மனு முறை கண்ட வாசகம், ஜீவ காருண்ய ஒழுக்கம் ஆகிய உரை நடைகளை எழுதினார். இவர் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

    இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர் சத்திய தர்மசாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

    பசிப்பினி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார்.

    ஆன்ம நேய ஒருமைபாட்டு "ஒளி" இன்றும் அறியாமையை நீக்கி "அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி, தனிப் பெருங்கருணை, அருட்பெரும் ஜோதி" அன்பை ஊட்டி வருகின்றது.

    அவர் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் நாள் (இன்று ) இனி ஆண்டு தோறும், தருபெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும், என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசானது வடலூர் சத்தியஞான சபைை பக்தர்கள் வந்து செல்வதற்கான உள் கட்டமைப்புகளை அதிகபடுத்தியும், சுத்தமான சூழ்நிலையை உருவாக்கவும் தமிழக் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் மகான் வள்ளலார் பெயரை புதுச்சேரி விமான நிலையத்திற்கு சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×