search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில்  5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கும் விழா
    X

    உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கும் விழா

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, இறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுயடியார் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஆஜெ. மணிகண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான ப. ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான யூ.எஸ். வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேலாளர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், வழக்கறிஞர் சிவசங்கரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×