search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சி கூட்டம்
    X

    பேரூராட்சி கூட்டம்

    • முதுகுளத்தூரில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
    • கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜஹான் தலைமையில், நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார்.

    மோகன்தாஸ் (7-வது வார்டு தி.மு.க.) பேசுகையில், சங்கராண்டி ஊரணி பகுதியில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளதால் டூவீலர் கூட செல்லமுடியவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர்: அந்த சாலையில் மக்கடம் அடிக்கப்படும்.

    மோகன்தாஸ்: முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சேகர் (10-வது வார்டு): தினசரி சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டும். கழிவறையில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும்.

    பால்சாமி (9-வது வார்டு): கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. சேர்மன்: கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×