search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்"

    • பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
    • பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

    துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் துபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 லட்சம் பில் தொகை இருந்தது. 'பணம் வரும்... போகும்...' என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும் அருந்தியதற்கான தொகையும் பில்லில் இருந்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாக வழங்கி இருந்ததும் பில்லில் இடம் பெற்றிருந்தது. இந்த பில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பசியால் அவதிப்படும் போது ஒரு நேர உணவுக்காக இவ்வளவு செலவழிப்பது வெட்கக்கேடானது என ஒரு பயனரும், பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • நேஷனல் ஷாப்பிங் மாலில் பரிசுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது.
    • மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை அருகே உள்ள பொன்னமராவதி பஸ் நிலையத்தின் அருகே உள்ள அஞ்சப்பர் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் ஷாப்பிங் மால் பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் பிரபலமான கடையாக உள்ளது.

    இங்கு மளிகை சாமான் கள் முதல் வீட்டில் அன்றாட பயன்பாட்டுக்கு தேவை யான அனைத்து பொருட்க ளும் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி வரை ஏராளமான காம்போ ஆபர்கள், பரிசு களுடன் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட் டுள்ளது. இத்துடன் பிளாஸ் டிக் பக்கெட்டு இலவசமாக வழங்கபடுகிறது.

    மேலும் ரூ.1,449-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்குவோருக்கு பிளாஸ் டிக் டப், ரூ.2,999-க்கு மேல் வாங்குவோருக்கு பக்கெட், ரூ.4,999-க்கு மேல் வாங்கு வோருக்கு சேர், குலோப் ஜாமூனுக்கு பாக்கெட்டுக்கு பாக்கெட் இலவசத்துடன் வாளியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆபர்களை பயன்ப டுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, பரிசு களையும் பெற்றுச் சென்று தீபாவளி பண்டி கையை சிறப்பாக கொண்டாடிட பொன்னமராவதி நேஷனல் ஷாப்பிங் மால் நிறுவனத் தார் அழைப்பு விடுத்துள்ள னர். மேலும் விபரங்களுக்கு 97881 01122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

    • பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன

    நாகர்கோவில் :

    பர்னிச்சர்கள் என்றாலே குமரி மாவட்ட மக்களின் நினைவுக்கு வருவது ராயல் பர்னிச்சர் தான். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது ராயல் பர்னிச்சர் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளாக வாடிக்கை யாளர் சேவையில் சிறப்பான பெயர் பெற்று, தென் தமிழ கத்தின் மிக பெரிய ஷோரூமாக இது விளங்கி வருகிறது.

    இங்கு தரமான பொருட்கள், நியாயமான விலை, கனிவான சேவை என்பதையே தாரக மந் திரமாக கொண்டு செயல்படுவதால், பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.

    இங்கு புது, புது டிசைன்க ளில் இம்போர்ட்டடு பர்னிச்சர்கள், உள்நாட்டு பர்னிச்சர்கள், ஸ்டீல் பர்னிச்சர்கள், புதிய மாடல் ஷோபாக்கள், நவீன மாடல் கட்டில்கள், டைனிங் மற்றும் டிரஸ்சிங் டேபிள்கள், டி.வி. ஸ்டாண்டுகள், வித, விதமான கம்ப்யூட்டர் டேபிள்கள் மற்றும் ரோலிங் இருக் கைகள், அலுவலகங்க ளுக்குரிய மேஜைகள், புக் செல்ப், பைல் ரேக் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஏராளமான மாடல்களில் உள்ளன.

    இங்கு வாடிக்கையா ளர்களுக்கான சுலப தவணை திட்ட வசதியும் செயல்ப டுத்தப்பட்டு வருகி றது. குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவ ரியும் செய்கிறோம். மர பர்னிச்சர் களை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் படியான மாடல்களில் பர்னிச்சர் களை தங்களது சொந்த தொழிற்சா லையில், உயர்தர தேக்கு, ஈட்டி மரங்களிலிருந்து தர மானதாக மிக நேர்த்தியாக, லைப்டைம் உத்திரவாதத்து டன் திறமை யான தொழிலாளர்களை கொண்டு செய்து கொடுக்கின்ற னர். இந்த நிறுவனத்தில் இம்போர்ட்டடு பர்னிச்சர், ஸ்டீல் பர்னிச்சர், அலுவலக பர்னிச்சர் என்று ஒவ்வொன் றிற்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, வாடிக்கை யாளர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொருட் களை தேர்வு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன. வாடிக்கை யாளர்கள் தங்க ளிடம் உள்ள வீட்டு உபயோக பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து, புதிய பொருட்களை வாங்கி கொள் ளும் எக்சேஞ்ச் வசதியும் எப்போதும் உண்டு. மேற்கண்ட தகவல்களை ராயல் பர்னிச்சர் உரிமையாளர் ஆரோக்கிய வினோ தெரிவித்தார். 

    • தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
    • சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.

    இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    கோவையில், வருகிற 28-ந்தேதி மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காகன சேலம் மாவட்டத்தினர் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந்தேதி கோவையில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை உதவி இயக்குநர், அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டலம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்- 641002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்கள் 17-ந்தேதிக்குள் இந்த முகவரியை சென்றடைய வேண்டும்.

    அஞ்சல் துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பிட்டு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

    அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.

    முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல உறையின் மீது டக் அதாலத் கேஸ் என்று குறிப்பிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிகழ்ச்சியில் கடன் வழங்குதல், புதிய கடன் விண்ணப்பம் பெறுதல், பிரதமரின் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டத்தில் புதிதாக இணைத்தல், நிதிசார் கல்வி மற்றும் வங்கி சார்ந்த சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக தீர்த்துக்கொள்ளும் வகையில் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

    இதில் வேளாண்கடன், தொழில்கடன், கல்விக்கடன், வீடு மற்றும் வாகன கடன் போன்ற கடன் வேண்டுவோர் நேரடியாக பங்குபெற்று பயன்பெறலாம்.

    ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களை போக்கி எளிதில் கடன்பெறவும் பயனுள்ளதாக அமையும்.

    எனவே புதிய தொழில் தொடங்கவும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×