என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thakur"

    • HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
    • லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு HDFC வங்கியில், வங்கி ஊழியர், வாடிக்கையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா என்ற ஊழியர் வீடியோவில் தனது சாதியை சொல்லி, "நான் ஒரு தாக்கூர்" என்று திரும்பத் திரும்பக் கூறி, என்னிடம் பிரச்சனை செய்யாதே என்று எச்சரிப்பதும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

    உடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் தலையிட்டு அவரை அமைதிப்படுத்தினாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லேப்டாப்பை தூக்கி அடிக்கவும் முயற்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த செயலிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஊழியருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தனியார் வங்கியிடம் இருந்து பொறுப்புக்கூறவும் வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால் எதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக HDFC வங்கி தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

    மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி பற்றி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சாத்வி பிராக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். #PragyaThakur #HemantKarkare #martyrKarkare #PragyaThakurapologise
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.
     
    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாத்வி பிரக்யா சிங், ‘மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்து லாக்கப்பில் அடைத்துவைத்து விசாரணை நடத்திய ஹேமந்த் கர்க்காரே என்ற போலீஸ்காரர் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்ரவதைகளை செய்தார்.

    என்னை இப்படி கொடுமைப்படுத்தும் நீயும் உன் குடும்பத்தாரும் நாசமாக போவீர்கள்! என்று நான் அப்போது அவரை சபித்தேன். அதேபோல், 26-11-2013 அன்று மும்பை தாக்குதலின்போது அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடமையாற்றி வீர மரணம் அடைந்த காவல்துறை வீரர் ஹேமந்த் கர்க்காரே-வின் தியாகத்தை கேவலப்படுத்தும் விதமாக இப்படி பேசிய சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், ‘ஹேமந்த் கர்க்காரேவை பற்றி நான் முன்னர் தெரிவித்த கருத்து நமது நாட்டின் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் நான் கூறியதை திரும்பப் பெறுகிறேன்.

    நமது எதிரிகளின் துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட அவரது தியாகத்தை மதித்து, மன்னிப்பும் கோருகிறேன்’என சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்றிரவு தெரிவித்துள்ளார். #PragyaThakur #HemantKarkare #martyrKarkare #PragyaThakurapologise
    ×