search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சல்த்துறை"

    கோவையில், வருகிற 28-ந்தேதி மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காகன சேலம் மாவட்டத்தினர் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந்தேதி கோவையில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை உதவி இயக்குநர், அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டலம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்- 641002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்கள் 17-ந்தேதிக்குள் இந்த முகவரியை சென்றடைய வேண்டும்.

    அஞ்சல் துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பிட்டு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும்.

    அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.

    முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல உறையின் மீது டக் அதாலத் கேஸ் என்று குறிப்பிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×