என் மலர்
நீங்கள் தேடியது "Complaints"
- கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார்.
- தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
கோவை
அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது 33). கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
புதுமாப்பிள்ளை
கடந்த 8-ந் தேதி அருள்குமார் தனது விவசாய நிலத்தில் பணியை முடித்து விட்டு அருகில் உள்ள பண்ணைக்குட்டைக்கு குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
நீண்டநேரமாகியும் அருள்குமார் வீடு திரும்பாததால் அவரது மனைவி சம்யுக்தா தேடத் தொடங்கினார்.
உறவினர்கள் அருள்குமாரை தேடி பண்ணைக்குட்டைக்கு சென்றனர். அங்கு நீரில் மூழ்கிய நிலையில் அருள்குமார் பிணமாக மிதந்தார்.
சாவில் மர்மம்
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அருள்குமாரின் உடலை மீட்டனர். அருள்குமார் பண்ணை குட்டை நீரில் மூழ்கி இறந்து இருப்ப தாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அருள்கு மார் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக கூறி அவரது மாமனார் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனது மகளின் கணவரான அருள்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அருள்குமார் குளிக்கச் சென்ற தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் போலீசார் விசாரிக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த மனுவை தொடர்ந்து அருள்குமார் மரணம் மர்மச்சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
- ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி பெண்களிடம் பண மோசடி செய்ய முயற்சி.
மதுரை
மதுரை மாவட்டம் பூசாரிப்பட்டி அருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த கிராம பெண்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊருக்கு கோமதி புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆணும் வந்த னர். அவர்கள் எங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பதாக கூறினர். அதை நம்பி அந்த பயிற்சி யில் சேர்ந்தோம். அப்போது நாங்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணம் மற்றும் போட்டோ ஆகியவற்றை வாங்கி கொண்டனர். 45 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 40 பெண்கள் கலந்து கொண்டோம்.
பயிற்சி முடிந்ததும் எங்களது ஆவணங்களை திருப்பிதரும்படி கேட்டோம். அதனை மேலூருக்கு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினார்கள். மேலும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழும் தருவதாக கூறினர்.
அவர்கள் கூறியதை நம்பி சில விண்ணப்பங்களில் கையெழுத்து போட்டு கொடுத்தோம். அவர்கள் கூறியபடி மேலூருக்கு சென்றோம். அப்போது ஆவணங்களை தராமல் அவற்றை உங்கள் ஊருக்கே வந்து தருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் எங்களது ஆவணங்களில் சில திருத்தங்களை செய்துள்ளனர். அதற்கு வந்த ஓ.டி.பி. போன்றவற்றை எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதில் போட்டோக்களை மாற்றி வைத்து வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்வது தெரியவந்தது.
இதுபற்றி நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலில் உள்ளோம். எங்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்த 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கும்பகோணம் பகுதியில் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின
தஞ்சாவூர்:
கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விதிகளை மீறி லாரி, டிராக்டர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோல் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்ற லாரி ஒன்றும், சரக்கு வேனும் மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.
இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. கடும் நடவடிக்கை இவ்வாறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததற்கு அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றி சென்றதே காரணம்.
எனவே இது போன்று அதிக பாரம் மற்றும் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாககடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
- தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்டு வரும். தொழில் நிறுவனங் களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்கள் போதுமான அளவில் வில்லை. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசல் பஸ்களாகவே உள்ளன. அவைகளில் கம்பிகள் உடைந்து நீட்டிக்கொண்டு பயணிகளை பயமுறுத்துகின்றன.
சில பஸ்களில் இருக்கைகள் அமர முடியாத அளவில் கிழிந்து சரிந்து சேதமாக காட்சியளிக் கின்றன. சில டவுன் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. மழை காலங்களில் பல பஸ்களின் மேற்கூரை சேதமாகி பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில பஸ்களில் குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே தற்போதுபெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அதில் பயணம் செய்யும் போது சர்க்கஸ் வாகனங்களில் செல்வது போல் உள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பஸ் நிறுத்தம் வரும்போது டிரைவர்கள் பெயரளவுக்கு நிறுத்திவிட்டு அவர்கள் ஏறுவதற்குள் பஸ்களை எடுத்துச்செல்கின்றனர். இதேநிலை மகளிர் கட்டணமில்லா பஸ்களிலும் உள்ளது.
எனவே பயணிகளின் நலன் கருதி மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். புதிதாக வாங்கப்படும் பஸ்களை அதிகமாக மதுரைக்கு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலப்படத்தை தவிர்த்து பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
- 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர், பதநீர், இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகிறது. எனவே திரவ குளிர்பானங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறி முறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.
அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் குறிப்பாக புதிய வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே, உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.
பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பில். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்க ளுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.
திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.
கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிரூட்ட, உணவுத் தர "ஐஸ் கட்டியைப்" பயன்படுத்த வேண்டும்.
உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி "நீல நிறத்திலும்" இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து, ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.
நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் உணவு பாதுகாப்பு அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை
எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும்போது, கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் கடும் இடி- மின்னல், மழைப்பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.
இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என கூறினார்.
- அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை.
திருப்பூர் :
மின்வாரிய பிரச்சினைகள் தொடா்பாக அளிக்கப்படும் புகாா்கள் மீது அலுவலா்கள் அலட்சியமாக செயல்படுவதாக மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.வினர் குற்றம்சாட்டியுள்ளனா்.
அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச. மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் முத்துவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மின்பகிா்மான வட்ட பகுதிகளில் உள்ள மின்சார வாரிய பிரச்னைகள் தொடா்பாக அளிக்கும் புகாா் மனுக்களை அலுவலா்கள் கிடப்பில் போட்டு அலட்சியப்படுத்தி வருகின்றனா். குறிப்பாக திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூா் ஆகிய 3 மின் பகிா்மான கோட்டங்களில் மாதந்தோறும் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களை, கோட்ட செயற்பொறியாளா்கள் தங்களுடைய எல்லைக்கு உள்பட்டது இல்லை எனக் கூறி நிராகரித்து வருகின்றனா். அதிலும் கடந்த பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
- மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
- இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.
- முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பஸ், பள்ளி, தெருவிளக்குகள், ரேஷன்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரு–மாறு பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ஆனந்தன், அ.தி.மு.க. வட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஜீவானந்தம், சிவராமன், பிரபாகர், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
- அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.
இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான பண பலன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இவர்களின் குறைகளைக் கேட்ட கலெக்டர் அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.
- 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள்.
- நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.
கோவிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி கோவில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 27-ந் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்தனர்.
இது குறித்து கோவிலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தர்ஷன் தீட்சிதர் அளித்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறையினர், போலீசாருடன் நேற்று மாலை கோவிலுக்கு வந்து விளம்பர பதாகையை அகற்றி, பக்தர்களை அனுமதிக்குமாறு கோரினர்.
அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொன்று தொட்டு நடைபெற்று வரும் நடைமுறை இது. இதனால் எங்களது உற்சவம் பாதிக்கும் என்பதால் பதாகையை அகற்ற மறுத்தனர். அப்போது அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தெரிவித்ததாவது:-
தேர் மற்றும் தரிசனத்திற்கு கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருள செய்தும், 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் சாமி தரிசனத்திற்கு ஏற்றுவது வழக்கம் கிடையாது.
நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர். மேலும் எங்களது உற்சவ பணியை செய்யவிட்டாமல் அறநிலையத்துறை செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார். மன நெருக்கடியை உருவாக்கி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை தில்லையம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறுகையில் எங்களை பணி செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்து விட்டனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என கூறினர்.