search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaints"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சென்னை:

    தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வேல்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 1358-ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி. தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

    எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் எம்.பி.கார்த்திகேயனை 9444221011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சா. இளவரசனை 6374160918 என்ற எண்ணிலும் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கோ.அசோக்கை 9025155455 என்ற எண்ணிலும் அணுகி புகார் கூறலாம்.

    காஞ்சிபுரம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பா.பாலமுருகனை 86672 22871 என்ற எண்ணிலும் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.திவ்யாவை 9952000256 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடசென்னை சட்டமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரத்திற்கு செலவின பார்வையாளராக அபிஜித் அதிகாரி, தொடர்பு அலுவலராக சண்முகம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக ஹரஹானந்த், தொடர்பு அலுவலராக முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய சென்னையின் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுபோத் சிங், தொடர்பு அலுவலராக இளங்கோ மற்றும் துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மதுகர் குமார், தொடர்பு அலுவலராக காசி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தென்சென்னையின் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக முகேஷ் குமாரி, தொடர்பு அலுவலராக ஹரிநாத் மற்றும் சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மானசி திரிவேதி, தொடர்பு அலு வலராக மோகன வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகளில் நேற்று முதல் தேர்தல் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இலவச தொலை பேசி எண்கள் 1950, 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவில் பூசாரி நியமனத்தில் இருதரப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.
    • பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மம்மானியூர் பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்காக தற்காலிக பூசாரி ஒருவரை ஒருதரப்பினர் நியமித்தனர். இதற்கு மற்ெறாரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் புதிய பூசாரியை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    ஆனால் தற்போது உள்ள பூசாரியே பூஜைகளை செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பூசாரியை நியமிக்கும்வரை திருவிழா நடத்துவதில் சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் பிடிவாதமாக இருப்பதால் திருவிழா நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

    எனவே தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

    திருப்பூர்

    கியாஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். கியாஸ் நுகர்வோர், நுகர்வோர் அமைப்பினர் மனுக்கள் வழங்கினர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் சரவணன் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு 50 ரூபாய் கூடுதல் தொகையை நுகர்வோரிடமிருந்து டெலிவரி மேன்கள் கட்டாய வசூல் செய்கின்றனர்.

    ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், பில் தொகையை விட கூடுதல் தொகை வசூலிப்பது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை. சிலிண்டர் கட்டணம் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கியாஸ் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் தனி உதவிமையம் அமைத்து தொடர்பு எண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
    • ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. பைல்ஸ்-1 என்ற பெயரில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவர்களின் சொத்து பட்டியலை வீடியோ வாக வெளியிட்டார்.

    அதில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உள்ள சொத்து விவரங்களை பட்டியலிட்டு இருந்தார்.

    அதில் தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,478.18 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த வகையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

    இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாளைக்கு (வெள்ளி) 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தொடங்க உள்ள நிலையில், அண்ணா மலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஏராளமான ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    அதில் 9 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது பினாமி சொத் துக்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக எந்தெந்த வகை யில் பணம் சம்பாதித்தனர். அந்த சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது போன்ற விவரங்களை அதில் பட்டியலிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த 9 அமைச்சர்கள் யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பற்றி மட்டும் வெளியில் தெரிவிக்கப் பட்டது.

    மற்ற விவரங்களை நாளை தொடங்கும் பாத யாத்திரையின் போது அண்ணாமலை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு துறை வாரியாக ஆவணங்களை சேகரித்து அதில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர் என்ற விவரங்களை பட்டியலிட்டு அதை பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து கவர்னரிடம் அண்ணாமலை வழங்கி இருப்பதால் அடுத்த கட்டமாக கவர்னரின் நடவ டிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் இந்த ஊழல் புகார்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவர் பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து கவர்னர் தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. அவர் வழக்கு தொடர பரிந்துரைத்தால் 9 அமைச்சர்களும் விசார ணையை சந்திக்க நேரிடும்.

    இதனால் 9 அமைச்சர்க ளுக்கு எந்த நேரத்திலும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்படும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழ்நிலையில் 9 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதை எவ்வாறு கையாளுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வின் 2-ம் பாகம் சொத்து பட்டியல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

    • 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள்.
    • நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.

    கோவிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி கோவில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 27-ந் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்தனர்.

    இது குறித்து கோவிலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தர்ஷன் தீட்சிதர் அளித்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறையினர், போலீசாருடன் நேற்று மாலை கோவிலுக்கு வந்து விளம்பர பதாகையை அகற்றி, பக்தர்களை அனுமதிக்குமாறு கோரினர்.

    அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொன்று தொட்டு நடைபெற்று வரும் நடைமுறை இது. இதனால் எங்களது உற்சவம் பாதிக்கும் என்பதால் பதாகையை அகற்ற மறுத்தனர். அப்போது அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தெரிவித்ததாவது:-

    தேர் மற்றும் தரிசனத்திற்கு கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருள செய்தும், 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் சாமி தரிசனத்திற்கு ஏற்றுவது வழக்கம் கிடையாது.

    நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர். மேலும் எங்களது உற்சவ பணியை செய்யவிட்டாமல் அறநிலையத்துறை செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார். மன நெருக்கடியை உருவாக்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து இந்து அறநிலையத்துறை தில்லையம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறுகையில் எங்களை பணி செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்து விட்டனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என கூறினர்.

    • மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என ஓய்வூதியர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
    • அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான பண பலன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இவர்களின் குறைகளைக் கேட்ட கலெக்டர் அந்தந்த பகுதி அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரித்து குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தினார்.

    • திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பஸ், பள்ளி, தெருவிளக்குகள், ரேஷன்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரு–மாறு பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ஆனந்தன், அ.தி.மு.க. வட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஜீவானந்தம், சிவராமன், பிரபாகர், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில், 21-ந் தேதி எரிவாயு நுகர்ேவார் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் எண்ணை நிறுவன மேலாளர்கள், எரிவாயு நுகர்வோர்கள், முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட போலீசாருக்கு சைபர் கிரைம் புகார்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
    வீ. கே. புதூர்:

    தமிழக காவல் துறையில் புதிதாக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக அந்தந்த தலைமையகத்தில் செயல்பட்டு வரும் சைபர் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கின்றனர்.

    பொது மக்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை தங்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில்  உடனுக்குடன் அளிக்கும்  வகையிலும், நீண்ட தூர பயணம் செய்து தலைமையகத்தில் புகார் அளிப்பதை   தவிர்க்கவும்,பொது மக்களுக்கு உதவியாக அனைத்து காவல் நிலையங்களிலும் புதிதாக சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    அதன்பேரிலும்,  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்  அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், முதல் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் உட்பட 3 சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட சைபர் சப்போர்ட் ஆபீசர்ஸ்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி  தலைமையில், பொது மக்களிடம் சைபர் கிரைம் புகார்களை பெற்று உடனடியாக ஆன்லைனில் புகாரை அளி ப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    மேலும் சைபர் கிரைம் குற்ற ங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறை யினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
    ×