search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "K.N.Vijayakumar"

    • திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பஸ், பள்ளி, தெருவிளக்குகள், ரேஷன்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரு–மாறு பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ஆனந்தன், அ.தி.மு.க. வட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஜீவானந்தம், சிவராமன், பிரபாகர், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் அருகில் இருந்து சமத்துவபுரம் வரை ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய தலைவர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன், ஒன்றிய தலைவர் ஐஸ்வர்யா மகாராஜா, பாசறை செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் மேக்கனம் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×