என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomi Pooja"

    • வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
    • ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.3 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய கட்டட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை வகித்து புதிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.இந்த விழாவில்,ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதியிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 65,26,000 மதிப்பில்நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிஒன்றிய பொறியாளர் கற்பகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் , பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சென்னியப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் , சுப்பிரமணி , ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதிய பள்ளி அறைகள் கட்டுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல்நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்,தொடர் முயற்சி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர்,ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளிமேலாண்மை குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
    • வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 14-வது வார்டில் கருகம்பாளையம் மெயின்ரோடு முதல் சேனாதோட்டம் வரை சுமார் 400மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி,14-வது வார்டு கவுன்சிலர் துளசிமணி ஆறுமுகம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் அருகில் இருந்து சமத்துவபுரம் வரை ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய தலைவர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன், ஒன்றிய தலைவர் ஐஸ்வர்யா மகாராஜா, பாசறை செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் மேக்கனம் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.
    • குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மின் நகர், மகாவிஷ்ணு நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.இதையடுத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார்,சண்முகசுந்தரம்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ராமசாமி, சுப்பிரமணியம், மணியன், தங்கராஜ் சித்ரா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.
    • தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

    பல்லடம் :

    .பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் ஊராட்சி வெள்ள நத்தத்தில் ரூ.14 லட்சத்தில் காட்டூர் ரோடு முதல் காட்டம்பட்டி ரோடு வரை தார் சாலை, ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, அலகுமலை ஊராட்சி வேலாயுதம்பாளையத்தில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, கண்டியங்கோயில் வேளாங்காட்டு பாளைய த்தில் ரூ. 8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை, முதியாநெரிச்சலில் ரூ .1லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

    அதே போல தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி கொடுவாயில் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ராமசாமி நிதி மூலம் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.இதில் பல்லடம் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சிவாசலம்,ஒன்றிய செயலாளர் காட்டூர் சிவபிரகாஷ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், பரணிகுமார் , திருநாவுக்கரசு,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செம்பாவள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பா வள்ளத்தில் சுமார் 350- க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளி ஆர்.எஸ்.நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் பெற்று வருகிறார்கள். ஆகவே இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் என்.பிரபுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தலைவர் பிரபு ரூ.4,80,000 மதிப்பீட்டில் பகுதி நேர புதிய ரேஷன் கடை கட்ட உத்தரவிட்டார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் பிரபு, ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கலைவாணி தங்கராஜ், செம்பாவள்ளம் பட்டக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார்.

    குண்டடம் :

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கத்தாங்கண்ணி ஆதிதிராவிடர் காலனி முதல் பேரூராட்சி எல்லை வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மீனாகவுரி முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் கட்டிடப்பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் அமைக்க ரூ. 20 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் சபுரா சலீமா, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார்பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமிஅந்தோணி, முன்னாள் நகரச் செயலாளர் இஸ்மாயில், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் மாரியப்பன் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஷேக் தாவுது, பூலையா, சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
    • அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×