என் மலர்
நீங்கள் தேடியது "panchayat union"
- இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
- காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 -ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் தேவசேனா ராஜேந்திரன். இவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது.
காலியாக இருந்த சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 9 தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
தேர்தலில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா ராஜேந்திரன் மகள் நிலா (வயது22) ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.அவரை எதிர்த்து வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் சுரைக்காயூர் ஊராட்சி மன்ற தலைவராக நிலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தராஜ் அறிவித்தார்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் நிலாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான நிலா 22 வயது உள்ள தமிழகத்தில் மிகவும் குறைந்த வயது ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
- ஏற்காடு ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.
- அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
ஏற்காடு:
ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தவள்ளி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் ஊராட்சி நிதியில் இருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு. பின்பு செய்யப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்ட்து. ஏற்காட்டில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாக வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.
பழுதடைந்த பள்ளிகள் புதுப்பிக்க ஆவன செய்யப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் சார்பில் நிலம் தர கோரிக்கை விடுத்தனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இருப்பதாகவும் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 2 ஏக்கர் நிலம் தர வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஏற்காடு ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைவாணிமுரளி, வருதாயிரவி மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.