search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat union"

    • ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20 முகாம்கள் வீதம் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை கிராமத்தில் கலெக்டரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழு வினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    நிகழ்ச்சி தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.

    அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, கே.சி.சி. விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற் கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவச மாக தாதுஉப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்க ளிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்று களை விவசாயிகள் தங்க ளது பெயர்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணை யாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படும். எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வ லர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • “பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

    அவினாசி:

    அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியதாவது:-

    கார்த்திகேயன்:-எந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினாசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

    சீனிவாசன்:- உப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றார்.

    சேது மாதவன்:- பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், "பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலகலை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடு–களை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வாராப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வாராப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ராம.சின்னம்மாள் நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பள்ளி நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக விழாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் முன்னிலை வகித்து பேசுகி–றார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலை–வர் டாக்டர் எஸ்.குருசங்கர் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் பள்ளிக்கல்வி அதிகாரிகள், டாக்டர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகரில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    மாணிக்கம்தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி புதிய கட்டிடத்தை பார்வை யிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவ லர்கள் சிரமமின்றி பணி புரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறை களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ரூ.309.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொறியாளர் இந்துமதி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறுபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம்மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி , ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும்புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும்பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ்நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம்குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்குவழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.

    மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில்மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்குவழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின்இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளிஉள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது. இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள்,ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.70லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள்பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில்கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலணி முதல் பி.என் சாலை வரை கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6.86 லட்சம் மதிப்பில் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிநிறுத்துக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகட்டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் தண்டக்காரம்பாளையம் ரோடு முதல் பெரியபள்ளம்வரை சங்கன்பிட் அமைக்கும் பணியினையும்,

    விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்கணக்கம்பாளையம் பொன்விழா நகரில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41.25லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கனிமங்கள் மற்றும்குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.0.79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதுபார்க்கும் பணிகளையும், பள்ளி உள்கட்டமைப்புமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்கும் பணிகளையும்,

    நாதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11லட்சம்மதிப்பீட்டில் நாதம்பாளையம் விநாயகர் கோவில் முதல் சமத்துவபுரம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வாவிபாளையம் ரோடுமுதல் விக்னேஷ்வரா நகர் பிரிவு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும் எனமொத்தம் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஸ்ரீதர்,உதவிப் பொறியாளர் கற்பகம், மேற்பார்வையாளர் லதா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    • காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் தலைமை வகித்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா். இதில் குடிநீா்க் குழாய்களை மேம்படுத்தல், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் பெயா்ந்த பின்னா் தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    • மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.

    சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.

    • ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியதாவது:- காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலைகள் ஊராட்சி வசமே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்கி அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களான செல்வம் ராமசாமி, தாபினி மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, ஐயனார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
    • மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.

    குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் லதாஜெகன் தலைமையிலும், துணை சேர்மன் வளர்மதி அன்பழகன் முன்னிலை யிலும் நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சங்கர் கைலாசம் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கவுன்சில் கூட்டத்தில்; வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வது, செக்காணூரணி பகுதியில் கொசுத் தொல்லையை கட்டு ப்படுத்துவது, கிராமப்புற ரேசன் கடைகளில் பிரச்சினையாக கைரேகை வைப்பதில் உள்ள குறை பாடுகளை நீக்குதல், மத்திய அரசு வழங்கிடும் அரிசியை முறையாக முறையாக வழங்குதல், மத்திய அரசின் 100நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர் களை இடமாற்றம் செய்வது, செக்காணூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன் சிலர்கள் ஆண்டிச்சாமி, ஓம்ஸ்ரீ முருகன், சிவபாண்டி, மின்னல் கொடி ஆண்டிச் சாமி, பரமன், சிவபிரியா ஆகியோர் கருத்து தெரிவித்து பேசினார்கள்.

    இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் மன்ற உறுப் பினர்களால் நிறைவேற்றப்பட்டது

    • அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது
    • கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனடி ப்படையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

    முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்று நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். 6 பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டனர். கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறி னார்.

    ×