search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "survey in"

    • வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, புஞ்சை காள மங்கலம், கணபதி பாளை யம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்க வுண்டம் பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அந்த வகையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அதன்படி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூ.29.82 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும்,

    மொடக்குறிச்சி பேரூரா ட்சிக்குட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதி யில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.64 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்கு றிச்சி பகுதியில் ஒதுக்க ப்பட்ட வருவாய் திட்டப்ப குதி திட்டத்தின் கீழ் ரூ.307 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும்,

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதி யில் நபார்டு திட்டத்தின கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்க ன்வாடி முதல் பெருமா பாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும்,

    புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். முத்துக்கவுண்டம் பாளையம் ஊராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் விநாயகர் கோவில் முதல் முருகேசன் வீடு வரை 2 மெட்டல் அமைத்து தார்சாலை அமைக்கப் பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலையின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மொட க்குறிச்சி பேரூராட்சி க்கு ட்பட்ட மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் செனறு பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நோ யாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயா ளிகளிடம் நலம் விசாரி த்தார். பின்னர் மொடக்கு றிச்சி கால்நடை மருத்துவ மனையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்ந டைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து களின் இருப்புகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மொடக்குறிச்சி கிராமநிர்வாக அலுவல கத்தினை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஈஞ்ச ம்பள்ளி ஊராட்சி ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்ட ம்பாளையம், ஆதி திராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அமை ந்துள்ள மேல்நிலை நீர்த்தே க்க தொட்டி யினையும் பார்வையிட்டு குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    முன்னதாக வேளாண்-பொறியியல் துறையின் சார்பில் கணபதி பாளையம் ஊராட்சி, சாத்தாம்பூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தன் கீழ் ரூ.3.59 லட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.1.43 லட்சம்) சூரிய கூடா ரஉலர்த்தி (சோலார்) அமைக்கப் பட்டுள்ளதையும், தோட்டக் கலை-மலைப்பயிர் களத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் அவல்பூந்துறை பகுதியில் ரூ.75,000 மானிய உதவியுடன் சுமார் 1,200 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்பு கட்டமைப் பினையும்,

    ஈஞ்சம்பள்ளி ஊரா ட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 21 பயனாளிகளுடன் கூத்தம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈஞ்சம்பள்ளி தரிசு நிலத்தொகுப்பினையும் மற்றும் எழுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிக ளிடம் இருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு களையும் பார்வை யிட்டார்.

    முன்னதாக நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் செயல்படும் தொழிற் பேட்டையினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, சண்முகப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரம், உதவிபொறி யாளர்கள் ரமேஷ்குமார், பர்கத், மொடக்குறிச்சி தாசில்தார் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிரு ந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
    • மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.

    குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×