search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modakurichi area"

    • வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, புஞ்சை காள மங்கலம், கணபதி பாளை யம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்க வுண்டம் பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அந்த வகையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அதன்படி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூ.29.82 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும்,

    மொடக்குறிச்சி பேரூரா ட்சிக்குட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதி யில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.64 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்கு றிச்சி பகுதியில் ஒதுக்க ப்பட்ட வருவாய் திட்டப்ப குதி திட்டத்தின் கீழ் ரூ.307 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும்,

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதி யில் நபார்டு திட்டத்தின கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்க ன்வாடி முதல் பெருமா பாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும்,

    புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். முத்துக்கவுண்டம் பாளையம் ஊராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் விநாயகர் கோவில் முதல் முருகேசன் வீடு வரை 2 மெட்டல் அமைத்து தார்சாலை அமைக்கப் பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலையின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மொட க்குறிச்சி பேரூராட்சி க்கு ட்பட்ட மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் செனறு பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நோ யாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயா ளிகளிடம் நலம் விசாரி த்தார். பின்னர் மொடக்கு றிச்சி கால்நடை மருத்துவ மனையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்ந டைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து களின் இருப்புகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மொடக்குறிச்சி கிராமநிர்வாக அலுவல கத்தினை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஈஞ்ச ம்பள்ளி ஊராட்சி ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்ட ம்பாளையம், ஆதி திராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அமை ந்துள்ள மேல்நிலை நீர்த்தே க்க தொட்டி யினையும் பார்வையிட்டு குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    முன்னதாக வேளாண்-பொறியியல் துறையின் சார்பில் கணபதி பாளையம் ஊராட்சி, சாத்தாம்பூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தன் கீழ் ரூ.3.59 லட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.1.43 லட்சம்) சூரிய கூடா ரஉலர்த்தி (சோலார்) அமைக்கப் பட்டுள்ளதையும், தோட்டக் கலை-மலைப்பயிர் களத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் அவல்பூந்துறை பகுதியில் ரூ.75,000 மானிய உதவியுடன் சுமார் 1,200 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்பு கட்டமைப் பினையும்,

    ஈஞ்சம்பள்ளி ஊரா ட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 21 பயனாளிகளுடன் கூத்தம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈஞ்சம்பள்ளி தரிசு நிலத்தொகுப்பினையும் மற்றும் எழுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிக ளிடம் இருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு களையும் பார்வை யிட்டார்.

    முன்னதாக நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் செயல்படும் தொழிற் பேட்டையினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, சண்முகப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரம், உதவிபொறி யாளர்கள் ரமேஷ்குமார், பர்கத், மொடக்குறிச்சி தாசில்தார் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிரு ந்தனர்.

    • ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது.
    • இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

    மொடக்குறிச்சி பகுதி யூனியனாக இருந்ததை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு தாலுகாவாக தரம் உயர்ந்தது. இங்கு அரசு சார்ந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலு வலகம், தாலுகா அலு வலகம், பேரூராட்சி, அரசு ஆண்கள், பெண்கள் மேல நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், தோட்ட க்கலைத்துறை அலுவலகம், ப.எஸ்.என்.எல். அலுவலகம், 2 கிராம நிர்வாக அலுவல கங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் நிறுவன அலுவல கங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    மேலும் வாரச்சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், குளியல் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் இயங்கி வருகின்றன.

    இதற்காக மொடக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழு வதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பொது மக்கள் பல்லாயிரக்கண க்கானோர் வந்து செல்கின்ற னர்.

    அதேபோல் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் மெயின்ரோடு என்பதால் இந்த வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்களும், சரக்கு வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ேமலும் தினமும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளூரிலும் வெளியூர் பகுதிக்கும் சென்று வரு கிறார்கள்.

    இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது. மேலும் மொடக்குறிச்சிக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைகளின் நிழலை தேடி கால் கடுக்க நின்று செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    குறிப்பாக மொடக்குறிச்சி தாலுகா மற்றும் இதர அரசு மற்றும் தனியார் அலுவல கங்களுக்கு பல்வேறு பணி களுக்காக வரும் பொது மக்கள் பஸ் நிலையம் இல்லாததால் சிரமப்படு கின்றனர். அதேபோல் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியோர்கள் பஸ்சுக்காக நிற்க முடியாமல் அவதி ப்படுகின்றனர்.

    மொடக்குறிச்சியில் இருந்து அவல்பூந்துறை செல்லும் கணபதிபாளை யம், பாசூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், எழுமாத்தூர், விளக்கேத்தி, எல்லக்கடை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு எப்பொழுது பஸ் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளின் நிழல்களில் நின்று காத்திருந்து செல்கி ன்றனர்.

    மொடக்குறிச்சி 4 ரோட்டில் ஈரோடு முத்தூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் ஈரோடு முத்தூர் சாலை அருகே தாழ்வான பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருவதால் மாணவர்களின் கவனம் அடிக்கடி சிதறி வருகிறது.

    குறிப்பாக மழைக்கால ங்களில் வெள்ள நீர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து செல்வதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியமாக மாறிவிடுகிறது. தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருப்ப தால் வாகனங்களின் சத்தம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆர்ப்பாட்டம், பேரணி என மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் நடப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனம் சிதறும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது.

    மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் ெபாது மக்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் ேராடடை கடக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் ேபாதுமான இட வசதி உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களை போதுமான இட வசதி உள்ள, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு பள்ளி மாணவ, மாணவி களுக்கு அதிக அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி இருப்பதுடன் விளையாட்டு மைதா னங்களும் மிகப்பெரிய அளவில் உள்ளது.

    மேலும் தற்போது இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்ட இடத்தில் அப்பகுதி முழுவதும் விரி வாக்கம் செய்து மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

    மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்கள் பஸ்சில் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். பஸசுக்கா காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. பொது மக்களுக்கு போதுமான வசதிகளும் கிடைத்துவிடும். விவசாய பொருட்களும் எளிதில் வேறு இடத்திற்கு பஸ்சில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

    மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமையாமல் இரப்பது வருத்தமாக உள்ளது.

    எனவே பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொடக்குறிச்சி பஸ் நிலையத்தை விரைந்து அமைக்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×