search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் மாணிக்காபுரத்தில் குடிநீர் விரிவாக்க பணிகளுக்காக பூமிபூஜை
    X

     பூமி பூஜை நடைபெற்ற காட்சி.

    பல்லடம் மாணிக்காபுரத்தில் குடிநீர் விரிவாக்க பணிகளுக்காக பூமிபூஜை

    • மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.
    • குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி மின் நகர், மகாவிஷ்ணு நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் வருவதில்லை.இதையடுத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார்,சண்முகசுந்தரம்,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் ராமசாமி, சுப்பிரமணியம், மணியன், தங்கராஜ் சித்ரா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×