search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development Work"

    • ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.

    பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை - காசிப்பாளையம் - பூத்துறை - மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை - பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சாரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தரவேண்டுமென பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் நீண்டகால கோரிக்கையாக வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியினை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருச்சிற்ற ம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கீ.மீ. நீள சாலையினை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும், ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரை உள்ள 2 கீ.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் 5 கீ.மீ. நீள சாலை, நெடுஞ்சாலை த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டு ப்பாளையம் சாலையானது (2.95 கீ.மீ. நீளம்) 1.69 கோடி மதிப்பீட்டிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது (1.35 கீ.மீ. நீளம்) ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலை மேம்பாட்டு பணிக ளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பழனி,திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை முதல் பூத்துறை வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது.
    • ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைத்தல், அவிநாசி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், பழங்கரை ஊராட்சியில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியாயிபாளையம் சாலை முதல் காமராஜா் நகா் 7-ஆவது வீதி வரை கான்கிரீட் சாலை, ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என ரூ.58.28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பஆய்வு செய்தாா். மேலும், வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அவிநாசி வட்டாட்சியா் சுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் செந்தில்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் விதமாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நட்சத்திர ஏரி நடைபாதை, படகு குழாம் சீரமைப்பு , ஏரியை சுற்றி அமைக்க ப்படும் தடுப்பு வேலிகள் , ஏரியில் தண்ணீரை சுத்திகரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது . நட்சத்திர ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி உள்ளிட்டவை செய்தும் சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை மேம்படுத்தும் விதமாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நட்சத்திர ஏரி நடைபாதை, படகு குழாம் சீரமைப்பு , ஏரியை சுற்றி அமைக்க ப்படும் தடுப்பு வேலிகள் , ஏரியில் தண்ணீரை சுத்திகரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லதுரை , துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    • எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஈரோட்டில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு ரெயில் நிலையம் எந்த நேரமும் பயணிகள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.

    இங்கு காலை, மதியம், மாலை, இரவு என எந்த நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தற்போது வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரோட்டோரம் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருவதால் வழக்கத்தை விட தற்போது இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

    குறிப்பாக காலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்று அணிவகுத்து செல்கின்றன. தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் வாகன நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.

    ரெயிலை பிடிக்க செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முத்தூர் ஊராட்சியில்கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
    • ரெட்டியார்பட்டி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆலோசனை

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அனைத்து திட்டப்பணி களும் காலதாமதமின்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்தி ற்குள் தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக இன்று பாளை யூனியன் முத்தூர் ஊராட்சியில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளையும், ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தொடக்கப்பள்ளி கட்டுமானப்பணி

    பின்னர் முத்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொடியன்குளத்தில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்து, வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

    தொடர்ந்து ரெட்டியார்பட்டி மேம்ப டுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பார்வையிட்டார். மருந்துகள் சேமிப்பு அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்கும் அறை, எக்ஸ்ரே எடுக்கும் அறை போன்ற அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ரெட்டியார்பட்டி குளத்தினையும் பார்வையிட்டு குளத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை பகுதியை சார்ந்த நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குறுக்கு வீதியில் 30 வருட காலமாக மழையால் அப்பகுதி பொதுமக்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்தனர். மழைக் காலங்களில் அப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிரம்பி விடும். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதையடுத்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். அவர் சட்டமன்ற நிதியின் கீழ் நகராட்சி மூலம் அப்பகுதியில் ப-வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

    அதன்படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதிக்கு அருகில் உள்ள குறுக்கு வீதிக்கு ப-வடிவ வாய்க்கால் மற்றும் தற்போதுள்ள சிமெண்ட் சாலையை மேம்படுத்துவதற்கான பூமி பூஜையை ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டுமான பணியினை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்பணியினை தி.மு.க. நிர்வாகிகள் உடன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி துணைப்பொறி யாளர் பிரபாகரன், என்ஜினீயர் சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் மற்றும் ரவிக்குமார் , ஊர் பொதுமக்கள் சகாயராஜ், வெங்கடேஸ்வரன், கணேசன், நடேசன், சிவக்குமார், முனுசாமி, ஜான், செங்கேணி, சுமதி, தமிழ்செல்வி, வசந்தா , ரகுமான் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார்.

    குண்டடம் :

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கத்தாங்கண்ணி ஆதிதிராவிடர் காலனி முதல் பேரூராட்சி எல்லை வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நபார்டு 2022-2023 திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மீனாகவுரி முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காகித மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஊராட்சியின் மூலம் நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளி களுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார்.

    தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியாளர்களிடம் இதை நன்றாக சீரமைத்தால் உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியாளரும் உரிய அளவீட்டு பணியை நாள் ஒன்றுக்கு சரியாக மேற்கொள்ளும் பொழுது அதிகபட்ச ஊதிய தொகையை எளிதாக பெற முடியும்.

    பணியா ளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான ஊதியத்தை பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என தெரிவித்தார்.

    தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

    முதுகுளத்தூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் திடல் சிறையத்தேவன் ஊரணியில் ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர் ஆய்வு செய்து தரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி, பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, தேரிருவேலி ஊராட்சி மன்றத்தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாத்தூர் யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் மற்றும் சடையம்பட்டி ஊராட்சி களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.5.61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் தள பணிகளையும், கே.கே.நகர் பகுதியில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். சடையம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊராட்சி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்படி விழுப்பனூர் ஊராட்சி கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், பிள்ளை யார்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு தொடர்பான பணியையும் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருப்பாற்கடல் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி உட்புறம் கான்கிரீட் அமைத்து குளத்தை சுற்றிலும் நடை பாதை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும், மடவார் வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், விவசாயிகள் பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் முசுக்கொட்டை மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெய்சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். ராஜபாளையம் அரசு மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்நல அலுவலர் கவிபிரியா, நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, ராஜபாளையம் அரசு தலைமை மருத்துவர் மாரியப்பன், சந்திரா, நகராட்சி செயற்பொ றியாளர் தங்கபாண்டியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
    • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.

    நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உள்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காங்கயம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள், வெள்ளகோவில் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்படுத்தும் பணிகள், உப்புப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தாராபுரம் நகராட்சி, உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (வெள்ளகோவில்), வெங்கடேசன் (காங்கயம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×