search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரடி ஆய்வு
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜ்  அவர்களின் படம்.

    அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரடி ஆய்வு

    • தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது.
    • ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைத்தல், அவிநாசி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், பழங்கரை ஊராட்சியில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் பெரியாயிபாளையம் சாலை முதல் காமராஜா் நகா் 7-ஆவது வீதி வரை கான்கிரீட் சாலை, ரூ.16.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வளாகம் சீரமைப்பு என ரூ.58.28 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பஆய்வு செய்தாா். மேலும், வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அவிநாசி வட்டாட்சியா் சுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் செந்தில்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×