search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaraj MLA"

    • 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
    • அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
    • ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி ஆலூத்துபாளையத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.10 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம்,மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ. சேகர், வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன், துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் உதயகுமார், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரேஷன் கடை திறப்பு விழா முடிந்ததும் செல்வராஜ் எம்.எல்.ஏ.,விடம் ஆலூத்து பாளையத்திற்கு சரிவர பஸ் வசதி இல்லை என்றுகோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

    • பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
    • திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நிதி உதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்குவதற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரிடம் வழங்கினார். தி.மு.க. மாவட்ட நிர்வாகி திலகராஜ் உடனிருந்தார்.

    விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சிபினுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு கைத்தறி துறை சார்பில் மாநில அளவில் மாணவர்களுக்கான (பேஷன் டிசைன் படிக்கும்) இளம் ஆடை வடிவமைப்பாளர் போட்டி நடைபெற்றது. இதில் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு ஆசர் மில் லேபர் காலனியை சேர்ந்த தம்பதியர் விஜயன், சிந்து ஆகியோரின் மகன் சிபின் கலந்துகொண்டு மாநில அளவில் 2வது பரிசு பெற்றார். இதற்கான பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலக த்தில் மாணவர் சிபினுக்கு வழங்கினார். இதையடுத்து சிபின் தனது பெற்றோருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகி திலக்ராஜ், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 22வது வட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

    திருப்பூர் :

    ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றிதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்தி றனாளிகளுக்கு அரசு நிதியில் இருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளும், தங்களுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட வேண்டுமென அதிகப்ப டியான கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. அதனடி ப்படையில் ஒரு கால் இழந்த மாற்றுத்திற னாளிகளுக்கும், அரசு நிதியிலிருந்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ வழங்கிட வழிவகை செய்து தர வேண்டுமென கடந்த 2.7.2022 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

    எனது கோரிக்கையினை ஏற்று தற்போது நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எனது கோரிக்கையினை தாயுள்ளத்துடன் பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் சட்டப்பேரவையில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் , துறை சார் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செல்வராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். 

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள் மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர்.
    • வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள்மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர். அரசுக்கும் பொது மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.

    வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள்காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்என்னிடம் வரப்பெற்ற மனுக்களை தங்களுக்கு பரிந்துரைத்தேன். அதற்குதாங்களும் ஒப்புதல் அளித்து குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அதில்ஒரு சிலர் உள்வாடகை மற்றும் போக்கியத்துக்கு விட்டு தகுதியானவர்களுக்குவீடு கிடைக்காத நிலையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு அந்த குடியிருப்பு கிடைத்திட தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    • அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.
    • கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.

    கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே. டி.நாகராஜன், செயற்குழு உகாயனுர் கனகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சாமிநாதன், துரைமுருகன்,பழனிசாமி, கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
    • 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில்,பங்கேற்கசெல்லும் பக்தர்களுக்குபல்வேறு அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள் சார்பில்அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த சேவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் பத்மாவதிபுரத்தில் இயங்கி வரும் திருவண்ணாமலை டிரஸ்ட் மூலம்இரு மண்டபங்களில் 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 40வது ஆண்டாக, இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டுஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதற்காக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஏற்பாட்டில், வசூலிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை,டிரஸ்ட் செயலாளர் சண்முகசுந்தரத்திடம், எம்.எல்.ஏ., வழங்கினார். டிரஸ்ட் நிர்வாகிகள்விவேகானந்தம், மோகனசுந்தரம், முருகேசன்,சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க . செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்று முடிந்த 15-வது திராவிட முன்னேற்ற கழக அமைப்பு தேர்தலில் இரண்டாவது முறையாக கழக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று திருப்பூர் வடக்கு மாவட்டம், அவிநாசிக்கு வருகை தரும் முன்னாள் மத்திய அமைச்சர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி.க்கு திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு நாளை காலை 8 மணியளவில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    ஆகையால் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொ.மு.ச., பேரவை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    திருப்பூர் :

    தி.மு.க.வின் 15-வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ் எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னையில் இருந்து திருப்பூர் வந்த செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ஆளுயர மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    அதனைத் தொடர்ந்து திருப்பூர் ெரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் ,துணை பொது செயலாளர்கள் பகுதி செயலாளர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., பேசியதாவது:- என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மாவட்ட செயலாளராக பதவி தந்த தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அரவணைத்து சென்று கட்சியை மேலும் வலுப்படுத்த அயராது பாடுபடுவேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து பணியாற்ற வேண்டும். நமது கட்சி அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து நிறை குறைகளை கூறலாம்.பெரியார் ,அண்ணா சந்தித்த இந்த திருப்பூர் மண்ணில் வருகிற தேர்தல் அனைத்திலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கு எனது உயிர் உள்ளவரை கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை தளபதி காலடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 36-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி விரிவு, ஆதிபராசக்தி கோவில் வீதியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 36-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து கஞ்சிக்கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உள்ள அன்னைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டார். மேலும் பக்தர்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தின் திருப்பூர் மாவட்ட தலைவி சக்தி சரஸ்வதி சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் சக்தி பீட தலைவர்கள் நிரஞ்சனா தேவி, காண்டீபன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, நிழற்கூரை, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.காலேஜ்ரோடு அய்யப்பன் கோவில் முன் ரூ.31 ½லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமிபூஜை நடந்தது. தெற்குதொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    இது போல் கே.வி.ஆர்.நகர் பகுதியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, பெரிச்சிப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, பெரியதோட்டம் மெயின் ரோடு பகுதியில் ரூ.26½ லட்சத்தில் நிழற்கூரை அமைப்பதற்கான பூமிபூஜை, கோம்பை தோட்டம் மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம்மதிப்பில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை, பெரியதோட்டம்முதல் வீதியில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமையம்ரூ.25 லட்சத்தில் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளைதொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம்மதிப்பில் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ்,திலக்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×