search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர்ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் சார்பில் பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி  செல்வராஜ் எம்.எல்.ஏ.,வழங்கினார்
    X

    நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தையல் எந்திரத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., வழங்கிய காட்சி. 

    திருப்பூர்ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் சார்பில் பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி செல்வராஜ் எம்.எல்.ஏ.,வழங்கினார்

    • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 36-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி விரிவு, ஆதிபராசக்தி கோவில் வீதியில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் 36-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவிலில் இருந்து கஞ்சிக்கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உள்ள அன்னைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டார். மேலும் பக்தர்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தின் திருப்பூர் மாவட்ட தலைவி சக்தி சரஸ்வதி சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் சக்தி பீட தலைவர்கள் நிரஞ்சனா தேவி, காண்டீபன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×